Cinema

கூடி மொத்தமாக கும்மியடித்து விட்டார்களே..! அஜித் "பாணிதான்" சரி நடிகர் சூர்யா குழு ரகசிய ஆலோசனை..!

Suriya
Suriya

இரண்டு வருடம் கழித்து சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாவதால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர், சூர்யா மற்றும் அவரது தயாரிப்பு குழுவும் எதற்கும் துணிந்தால் படத்திற்கு மிக பெரிய வரவேற்பு கிடைக்கும் எனவும் ஜெய் பீம் படத்திற்கு பல்வேறு தரப்பும் ஆதரவு வழங்கியதாக கணக்கிட்டு மகிழ்ச்சியில் இருந்தது.


ஆனால் எதற்கும் துணிந்தவன் படம் வெளியான பல திரையரங்குகள் காலியாக இருந்ததும், எதிர்மறையான விமர்சனங்களும் சூர்யா தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. இது ஒருபுறம் என்றால் தேவையில்லாமல் அரசியல் பேசி எதிர்ப்பை சம்பாரித்ததுதான் மிச்சம்.. வட மாவட்டங்களில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்..,

மத்திய அரசின் திட்டங்களை விமர்சனம் செய்வதால் மத்திய அரசின் ஏஜென்சிகளின் குடைச்சல் என தேவையில்லாமல் நஷ்டத்தை சம்பாரித்ததுதான் மிச்சம் என சூர்யா தரப்பு ஆழ்ந்த வேதனையில் இருக்கிறதாம், சில ஆலோசகர்கள் வழங்கிய அறிவுரையின் பெயரில் நடந்த சூர்யாவிற்கு எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெருத்த அடியாக விழுந்துள்ளது.

சினிமாவில் அரசியல் பேசிய காலம் எல்லாம் ரஜினியுடன் முடிவடைந்து விட்டது.. விஜய் அரசியல் பேசினார் இப்போது தந்தை தாயுடன் முரண்பட்டு நீதிமன்றத்தில் நிற்கிறார், விஜய் சேதுபதி அரசியல் பேசினார் அடுத்தடுத்து அவரது படங்கள் தோல்வியை தழுவின, ஆனால் அரசியல் பேசாமல் தங்கள் சினிமா தொழிலை பார்க்கின்ற அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரது படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இனியாவது அரசியல் பேசாமல் சினிமா வேலையை மட்டும் பார்க்கலாம் என சூர்யா தரப்பு முடிவு செய்து விட்டதாம், மேலும் எப்படி தற்போது பாமகவுடன் மோதல் போக்கு, மத்திய பாஜக அரசுடனான மறைமுக விமர்சனம் போன்றவற்றை சரி செய்வது குறித்து சூர்யா தரப்பு ரகசிய ஆலோசனை இரண்டு ஆலோசகர்களை கொண்டு நடத்தி வருகிறதாம்.

எதற்கும் துணிந்தவன் தற்போது எதற்கும் பயந்தவன் தரப்பாக மாறி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, ஒரு திரைப்படம் மூலம் பல ரசிகர்களை சூர்யா பெற்று இருப்பதாக இடதுசாரிய ஊடகவியாளர்கள் பேசிய நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் மூலம் அது உண்மையில்லை என்பது தெளிவாக சூர்யா தரப்பிற்கு உணர்த்தியுள்ளது.

சிலர் தங்களது அரசியல் ஆதாயத்திற்கு சூர்யாவை கூடி கும்மியடித்து விட்டார்கள் என அவரது ரசிகர்களே அறிவுரை வழங்கும் நிலை உருவாகி இருக்கிறது.