Cinema

அடுத்த சர்ச்சையில் நயன்.... அம்மணிக்கு இதுதான் வேலையே...!

NAYANTHARA, VIGNESHSHIVAN
NAYANTHARA, VIGNESHSHIVAN

வயதான பெரியவர்கள் முதல் பள்ளி செல்லும் குழந்தைகள் வரை எல்லோருக்கும் இந்த ஒரு நடிகையை தெரியாமல் இருக்காது!! அதிலும் இளைஞர்களும் பெண்களும் இவருக்கு பெரும்  ரசிகர்களாகவே உள்ளனர். அந்த அளவிற்கு மக்கள் மனதில் என்றும் நீங்காத இடத்தை பெற்றிருக்கும் ஒரு பெண் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரையிலும் நடிகையாக மட்டுமே நடித்து அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். யார் இவர் என்று தானே யோசிக்கிறீங்க??? அதாங்க நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!!!திரைப்படங்களில் அதிகமாக நடிகருக்கே முக்கியத்துவம் கொடுத்து வரும் காலங்களிலும், நடிகரே இல்லாமல் தனியாக நடித்து சோலோ பர்பாமன்ஸில் டோரா, கோலமாவு கோகிலா, ஐரா, மற்றும் அறம் போன்ற திரைப்படங்களில் சோலோவாக நடித்து கலக்கி அதிக அளவில் ரசிகர்களை பெற்ற ஒரே நடிகை நயன்தாரா.


இதைத்தொடர்ந்து  நயன்தாரா முதன்முதலில் விக்னேஷை 2015 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான நானும் ரவுடி தான் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தார்.அவர்களின் முதல் சந்திப்பிலேயே இருவரும் மனதளவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒன்றாகக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், சிறப்பு சந்தர்ப்பங்களில் சிறப்பு நினைவுகளை உருவாக்குவதையும் அவர்களை ஒன்றாகக் காணலாம். இறுதியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்  ஜூன் 9, 2022 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு ஷாருக்கான், ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா, ரஜினிகாந்த் போன்ற நெருங்கிய நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அதன் பின் தற்போது வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுள்ளார் நயன்தாரா. மேலும் இவங்களோட திரைப்பட உலகத்தை பார்த்தால் அப்பண்ட் டவுன்ஸ் உள்ளது. அதேபோன்று இவருடைய தினசரி வாழ்க்கையை பார்த்தால் மீன் மார்க்கெட் போன்று பிரச்சனைகள் நிறைந்துள்ளது!!! இதைப் பற்றி நயன்தாராவே ஒரு தனியார் டிவி சேனலில் பேட்டியில் கூறியுள்ளார்.

என்னதான் நான் எல்லா பிரச்சினையில் இருந்தும் விலகி வீட்டிலேயே அமைதியா இருந்தாலும், பிரச்சனை எங்க வீட்டை தேடி வந்து கதவ தட்டுது!! என்று கூறியுள்ளார். அந்த அளவுக்கு இவருடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த பிரச்சனைகள் தானாகவே நடந்து கொண்டுள்ளது. ஆனால் இவர் அதற்கெல்லாம் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. என்னதான் பெரிய முன்னணி நடிகையாக இருந்தாலும் அவருடைய வாழ்க்கையிலும் நிறைய பிரச்சனைகள் நடக்கத்தான் செய்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் நயன்தாரா! இதைத்தொடர்ந்து தற்போது நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "Umm.. I'm lost!!" என்று சோசியல் மீடியால ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதோடு கடந்த சில காலங்களாகவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடையில் விரிசல் விழுந்து கொண்டுள்ளது என்ற தகவல் பரவி வந்த நிலையில் அவர்கள் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று செய்தி பரவி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் அவர்கள் நயன்தாராவின் பிறந்தநாள் அன்று நயன்தாராவிற்கு பிடித்த பாடலை புல்லாங்குழல் வாசிப்பவர் மூலம் வெளிப்படுத்தினார். 

இதைத்தொடர்ந்து தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனை unfollow பண்ணிட்டாங்க அப்படிங்கற விஷயம் பரபரப்பாகும்போது திரும்பியும் follow செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதற்கு முன்னர் அன்ஃபாலோ செய்திருந்தது உண்மைதான் என்று தெரியவந்தது. இந்த நிலையில் தான் கடைசியாக நயன்தாரா பதிவிட்டு இருந்த I'm lost என்பது புதுச்சேரியில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமிக்காக என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் இது அடுத்த படத்திற்கான ஹிட்டாகவோ அல்லது ஏதாவது விளம்பரமாகவோ இருக்கலாம் ஆனால் நயன்தாராவே வந்து கூறினால்தான் உண்மை என்னவென்று தெரியும் என்று கூறியுள்ளனர். ஆனால் மற்றுமொரு ரகசியத்தையும் கசியவிடுகின்றனர் சினிமா விமர்சகர்கள் அதாவது நயன்தாரா சினிமா தயாரிப்பு என இறங்கி ஒரு பெரிய தொகையை இழந்துவிட்டதாகவும், அதனால் குடும்பத்தில் சில பிரச்சினை எனவும் விவரங்களை கசிய விடுகின்றனர்..