
இந்தியாவும் அமெரிக்காவும் எதிரி நாடுகள் ஆகிவிட்டன என உருட்டி வந்த நிலையில் அமெரிக்க இந்தியாவுடன் மிக பெரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. இந்தியா ஒரு பக்கம் ரஷ்யா உடன் நெருக்கம் இஸ்ரேலுடன் நட்பு, ஈரானுடன் நட்பு, பிரிக்ஸ் குழுவில் இந்தியாவின் முக்கிய பங்கு என அமெரிக்காவுக்கு எதிராக உள்ள அனைத்திலும் இந்தியா உள்ளது அப்படி இருந்தும் அமெரிக்கா இந்தியாவுடன் ஒப்பந்தம் போடுகிறது என்றால் இந்தியாவின் பவரையும்பிரதமர் மோடியின் மோடியின் ராஜதந்திரத்தையும் கண்டு உலகமே மூக்கின் மேல் விரல் வைத்துள்ளது.
அமெரிக்காவின் 49-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல்வேறு நாடுகளின் மீதான பரஸ்பர வர்த்தக வரியை பலமடங்கு உயர்த்தியுள்ளார்.கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதியன்று, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கு, 26 சதவிகிதம் பரஸ்பர வர்த்தக வரி விதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு 90 நாள்களுக்கு ஜூலை 9 ஆம் தேதி வரை அந்த வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
அதே போல் அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. உலக வர்த்தக அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் இதனை இந்தியா தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், எந்த வகையான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்பது பற்றி அதில் கூறப்படவில்லை. இந்த நடவடிக்கை ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தியாவின் முதல் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான, வர்த்தக பேச்சுவார்த்தை அடுத்தகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இருநாடுகளும் ஜூலை 9 ஆம் தேதிக்கு முன்பு தங்களது வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன. அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பிக் பியூட்டிஃபுல் பில் (Big Beautiful Bill Event) நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், விரைவில் இந்தியாவுடனும் "மிகப் பெரிய" வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.அதே நேரத்தில், "எல்லா நாடுகளுடனும் ஒப்பந்தங்கள் செய்யமாட்டோம். என டிரம்ப் தெரிவித்துள்ளார்
இந்த சூழலில் இம்மாத தொடக்கத்தில் அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மை மன்றத்தில் பேசிய அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், "இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி கட்டத்துக்குள் வந்திருப்பதாகவும், இது இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நான் நம்புகிறேன். இந்த ஒப்பந்தம் மிக நெருங்கிய காலத்தில் அமையும், ஏனெனில் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் ஒன்றை நாம் கண்டுபிடித்துள்ளோம்"" என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, ஜூன் 10-ஆம் தேதி, இந்தியாவின் மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான சமநிலை பொருந்திய வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை செய்து வருவதாக தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 2025-ல் சந்தித்தபோது இந்த ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும், இது இரு நாடுகளின் வர்த்தக வளர்ச்சிக்கு மிக முக்கிய வாய்ப்பு என்றும் அவர் கூறியிருந்தார். இந்த ஒப்பந்தம் அமெரிக்கா - இந்தியா இடையேயான நெருக்கமான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் எதிர்பார்ப்பு உள்ளது. இது உலக நாடுகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது ஏனெனன்றால்
இந்தியாவுக்கு எதிராக தன அமெரிக்க இருக்கிறது என்று உருட்டி வந்த நிலையில் டிரம்ப் மீண்டும் இந்தியா பக்கம் திரும்பியுள்ளார். ஏனென்றால் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அதற்கடுத்து இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் நிறுத்தம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக போர் நிறுத்தத்திற்கு பிறகு ஈரான் அதிபர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். இங்குள்ள ஸ்டிக்கர் அரசு போல் டிரம்ப் நான் தான் போர் நிறுத்தம் செய்தேன் என மார்தட்டி கொண்டார் என்பது குறிபிடத்தக்கது