24 special

கூமாபட்டி ஏங்ங்ங்க...10 கோடி எங்கங்க... ரீலால் சிக்கிய திராவிட மாடல்! உலக அளவில் விளம்பர ஆட்சிக்கு தலைகுனிவு

PILAVAKKALDAM,MKSTALIN
PILAVAKKALDAM,MKSTALIN

 தி.மு.க., ஆட்சியில்,அறிவிப்பு மட்டுமே வருகிறது திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதில்லை என்ற குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தற்போது அதை நிரூபிக்கும் வகையில் கூமாபட்டி சம்பவம் நிகழ்ந்துள்ளது.  


ஒரு ரிலாக்ஸ் வேண்டும் என்றாலே பயணம் செய்ய வேண்டும் என்ற ட்ரெண்ட் உருவாகிவிட்டது. வழக்கமான இடத்தை தவிர்த்து மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று பலரும் விரும்புவர்.சில தனித்துவமான இடங்களை தேடி தேடிச் சென்று பார்ப்பார்கள். இதற்கு சமூக ஊடகங்கள் பேருதவியாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு சிறிய கிராமம் திடீரென்று இணையதளத்தில் வைரலாகி, அந்த கிராமத்தை பார்க்க vlogger-கள் சென்று வருகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ”கூமாபட்டி” என்ற கிராமம் தான் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது இந்த இடம் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் கூமாபட்டி அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படி இந்த கிராமம் மக்களை ஈர்த்தது என்றால், இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது கிராமத்திற்கு வருமாறு சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.அந்த வீடியோவின் படி, ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க.. உங்களுக்கு லவ் ஃபெயிலியரா? 4 குழந்தை பெற்றும் வாழ்க்கை சந்தோஷமா இல்லையா? மன அழுத்தமா? கூமாபட்டிக்கு வாங்க.. இந்த தண்ணில குளிச்சு பாருங்க.. எந்த வியாதியும் வராது. சொர்க்க பூமி இது" என பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார்.மேலும் பிளவக்கல் அணை மேம்பாட்டுக்கு தமிழக அரசு ரூ10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது; ஆனால் என்ன பணிகள் நடந்துள்ளது என்பதே தெரியவில்லை என குற்றம் சாட்டி இருந்தார்.“முதலமைச்சர் ரூ. 10 கோடி ஒதுக்கியபோதும், பிளவக்கல் அணை முடங்கியிருக்கு... இது எங்க கூமாப்பட்டிக்கான அவச்செயல்.. அந்த ஏக்கத்தாலதான் அந்த வீடியோ பதிவிட்டேன் என புலம்பி தள்ளியுள்ளார் இன்ஸ்டா பிரபலம். இந்த வீடியோ திராவிட மாடலின் முகத்திரையினை கிழித்துள்ளது.  இணையதளத்தில் 10கோடி எங்கே எனவும் கேட்டு வருகிறார்கள்.  

இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்கில் இருக்கும் கூமாப்பட்டியின் பிளவுக்கல் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் குறித்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்; விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவுக்கல் பெரியாறு அணையில் ரூபாய்.10.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரல் வீடியோவில் பேசிய இளைஞர், சில ஆண்டுக்கு முன் கூமாபட்டியில் 10 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணி நடக்கும் என்று அறிவித்ததாகவும், ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்றும் புகார் கூறியிருந்தார். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆகா இந்த ஆட்சி வெறும் வெறும் விளம்பரமே என தெரியவந்துள்ளது.