24 special

ஈரானுக்கு ஆதரவாக உருட்டிய ஊடகங்களின் முகத்திரை கிழிந்தது! கெஞ்சி கூத்தாடும் ஈரான்..மொத்தமும் காலி....வச்சு செய்யும் இஸ்ரேல்!

MASOUD PEZESHKIEN,ISERAL
MASOUD PEZESHKIEN,ISERAL

 இஸ்​ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்து வரு​கிறது.இதில் ஈரானை தூக்கி வைத்து பேசி வருகிறார்கள் ஈரான் இஸ்ரேலை அடித்து நொறுக்கிவிட்டது இஸ்ரேல் அவ்வளவுதான் என ஆனால் அங்கு அடி உதை வாங்கி கொண்டிருபப்து ஈரான் தான். இஸ்ரேல் தினமும் ஈரானை அடித்து நொறுக்கி வருகிறது. இஸ்ரேல் அணு ஆயுத தயாரிக்கும் இடங்களை குறிவைத்து தான் தாக்குதல் நடத்துகிறது. ஆனால் ஈரான் பாகிஸ்தானை போன்று மக்கள் இருக்கும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. நேருக்கு நேர் மோதாமல் பொதுமக்களையும் பெண்களையும் முன் வைத்து தாக்குதல் நடத்துவது தீவிரவாதிகளுக்கு தான் பொருந்தும் . அதையே பாகிஸ்தான் ஈரான் போன்ற நாடுகள் கடைபிடித்து வருகிறது. 


இந்த நிலையில் அணுகுண்டு தயாரிப்​பில் ஈரான் தீவிரம் காட்​டிய​தால், அந்த நாட்​டின்​ மீது இஸ்​ரேல் விமானப்​படை கடந்த 13-ம் தேதி தாக்​குதல் நடத்​தி​யது. அன்​றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. நாட்​டின் மூத்த அணு விஞ்​ஞானிகள் 9 பேர், ராணுவ தளப​தி​கள் 3 பேர் உட்பட ஏராள​மானோர் கொல்​லப்​பட்​டனர். இதற்கு பதிலடி​யாக, இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மூலம் அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தி​யது.

இந்த நிலை​யில், இரு நாடு​கள் இடையே நேற்று 3-வது நாளாக போர் நீடித்​தது. இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் 150 ஏவு​கணை​களை வீசி​யது. இதில் பெரும்​பாலான ஏவு​கணை​கள் நடு​வானில் இடைமறித்து அழிக்​கப்​பட்​டன. எனினும், சில ஏவு​கணை​கள் இஸ்​ரேல் பகு​தி​களில் விழுந்​தன. இஸ்​ரேலின் பாட் யாம் நகரில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின்​மீது ஈரான் ஏவு​கணை விழுந்து வெடித்து சிதறியது. இதில் 6 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இஸ்​ரேலின் வேறு சில பகு​தி​கள் மீதும் ஏவு​கணை​கள் விழுந்​தன.

ஈரான் தாக்​குதலில் இஸ்​ரேலில் இது​வரை 13 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​துள்​ளனர். இஸ்​ரேலின் ஹனிபா நகரில் உள்ள எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யம் மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது’ என்று இஸ்​ரேல் அரசு வட்​டாரங்​கள் கூறின. ஈரான் தலைநகர் தெஹ்​ரானில் அந்த நாட்​டின் அணுசக்தி தலை​மையகம் உள்​ளது. இதை குறி​வைத்து இஸ்​ரேல் ட்ரோன்​கள் நேற்று தாக்​குதல் நடத்​தின. இதில் அணுசக்தி தலை​மையகம் தீக்​கிரை​யானது. தெஹ்​ரான், பூசெகர் பகு​தி​களில் உள்ள எண்​ணெய் வயல்​கள் மீது இஸ்​ரேலின் ட்ரோன்​கள் தாக்​குதல் நடத்​தின. இதில், எண்​ணெய் வயல்​கள் தீப்​பிடித்து எரிந்​தன. ஈரானின் ராணுவ முகாம்​கள் உட்பட 150 இடங்​களை குறி​வைத்து இஸ்​ரேல் போர் விமானங்​கள், ட்ரோன்​கள் தாக்​குதலை நடத்​தின.

‘இஸ்​ரேல் ராணுவ தாக்​குதலில் ஈரான் முழு​வதும் இது​வரை 140-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். நூற்​றுக்​கணக்​கானோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். இஸ்​ரேல் தொடர்ச்​சி​யாக தாக்​குதல் நடத்​து​வ​தால், மெட்ரோ ரயில் நிலை​யங்​கள், சுரங்​கப் பாதைகளில் பாது​காப்​பாக இருக்​கு​மாறு மக்​களை அறி​வுறுத்தி உள்​ளோம்’ என்று ஈரான் அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறும்​போது, ‘‘இஸ்​ரேலுக்கு எதி​ராக ஒட்​டுமொத்த முஸ்​லிம் நாடு​களும் ஓரணி​யில் திரள வேண்​டும். அப்​போது​தான் இஸ்​ரேலின் சதி​களை முறியடிக்க முடி​யும். என அழ தொடங்கியுள்ளார். 

இதற்கிடையில் இஸ்​ரேல் ராணுவம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘ஈரான்மக்​களுக்கு எதி​ராக நாங்​கள் போரிட​வில்​லை. ஈரானின் கொடுங்​கோல் ஆட்​சிக்கு எதி​ராகவே போரிடு​கிறோம். ஈரான் ராணுவ முகாம்​களுக்கு அரு​கில் வசிக்​கும் மக்​கள் பாது​காப்​பான இடங்​களுக்கு செல்​லு​மாறு கேட்​டுக் கொள்​கிறோம்’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.இதுதொடர்​பாக சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறும்​போது, ‘‘இஸ்​ரேல் - ஈரான் இடையி​லான போர் தீவிரமடைந்து வரு​கிறது. இதனால், மத்​திய கிழக்கு நாடு​களில் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது.