
இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்து வருகிறது.இதில் ஈரானை தூக்கி வைத்து பேசி வருகிறார்கள் ஈரான் இஸ்ரேலை அடித்து நொறுக்கிவிட்டது இஸ்ரேல் அவ்வளவுதான் என ஆனால் அங்கு அடி உதை வாங்கி கொண்டிருபப்து ஈரான் தான். இஸ்ரேல் தினமும் ஈரானை அடித்து நொறுக்கி வருகிறது. இஸ்ரேல் அணு ஆயுத தயாரிக்கும் இடங்களை குறிவைத்து தான் தாக்குதல் நடத்துகிறது. ஆனால் ஈரான் பாகிஸ்தானை போன்று மக்கள் இருக்கும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. நேருக்கு நேர் மோதாமல் பொதுமக்களையும் பெண்களையும் முன் வைத்து தாக்குதல் நடத்துவது தீவிரவாதிகளுக்கு தான் பொருந்தும் . அதையே பாகிஸ்தான் ஈரான் போன்ற நாடுகள் கடைபிடித்து வருகிறது.
இந்த நிலையில் அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டியதால், அந்த நாட்டின் மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த 13-ம் தேதி தாக்குதல் நடத்தியது. அன்றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. நாட்டின் மூத்த அணு விஞ்ஞானிகள் 9 பேர், ராணுவ தளபதிகள் 3 பேர் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது.
இந்த நிலையில், இரு நாடுகள் இடையே நேற்று 3-வது நாளாக போர் நீடித்தது. இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் 150 ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன. எனினும், சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதிகளில் விழுந்தன. இஸ்ரேலின் பாட் யாம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்மீது ஈரான் ஏவுகணை விழுந்து வெடித்து சிதறியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேலின் வேறு சில பகுதிகள் மீதும் ஏவுகணைகள் விழுந்தன.
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் ஹனிபா நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என்று இஸ்ரேல் அரசு வட்டாரங்கள் கூறின. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அந்த நாட்டின் அணுசக்தி தலைமையகம் உள்ளது. இதை குறிவைத்து இஸ்ரேல் ட்ரோன்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இதில் அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது. தெஹ்ரான், பூசெகர் பகுதிகளில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேலின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில், எண்ணெய் வயல்கள் தீப்பிடித்து எரிந்தன. ஈரானின் ராணுவ முகாம்கள் உட்பட 150 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள், ட்ரோன்கள் தாக்குதலை நடத்தின.
‘இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் ஈரான் முழுவதும் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதால், மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கப் பாதைகளில் பாதுகாப்பாக இருக்குமாறு மக்களை அறிவுறுத்தி உள்ளோம்’ என்று ஈரான் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறும்போது, ‘‘இஸ்ரேலுக்கு எதிராக ஒட்டுமொத்த முஸ்லிம் நாடுகளும் ஓரணியில் திரள வேண்டும். அப்போதுதான் இஸ்ரேலின் சதிகளை முறியடிக்க முடியும். என அழ தொடங்கியுள்ளார்.
இதற்கிடையில் இஸ்ரேல் ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரான்மக்களுக்கு எதிராக நாங்கள் போரிடவில்லை. ஈரானின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகவே போரிடுகிறோம். ஈரான் ராணுவ முகாம்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறும்போது, ‘‘இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.