24 special

முழு வீச்சில் களமிறங்கிய இந்தியா! நினைத்ததை பிசிறு இல்லாமல் செய்த மோடி! ருத்ராஷ்ட்ராவை இறக்கியது இந்தியா

PMMODI,JOHNSPENCER
PMMODI,JOHNSPENCER

 இந்தியா தற்போது ஆயுத தயாரிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ‘ருத்ராஷ்ட்ரா’ என்ற ட்ரோனை சோலார் ஏரோஸ்பேஸ் அண்ட் டிபன்ஸ் லிமிடெட்(எஸ்டிஏஎல்) நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயார் செய்தது. இது செங்குத்தாக மேலெழும்பி மற்றும் தரையிறங்கும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை போக்ரானில் கள பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்தது. பரிசோதனையில் 50 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தகர்த்தது. இலக்கு தூரத்தை அதிகரித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளும் வெற்றிகரமாக முடிந்தன.


ருத்ராஷ்ட்ரா ட்ரோனால் 1.5 மணி நேரம் பறந்து சென்று 170 கி.மீ இலக்கை தாக்க முடியும். இந்த ட்ரோனால் தன்னிச்சையாக செயல்பட்டு தாக்குதல் நடத்தியபின் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வர முடியும். அதோடு இதில் உள்ள கேமிரா மூலம் தாக்குதல் காட்சிகளை நேரடியாக காணலாம்.மேக் இன் இந்தியா திட்டத்தால், தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோனால், எதிரி நாட்டுக்குள் 100 கி.மீ தூரம் சென்று இலக்குகள் மற்றும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த முடியும். இந்த பரிசோதனையை பார்வையிட ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது. இது அவர்களுக்கு ஊக்குவிப்பாகவும், புதுமையை கண்டுபிடிக்கவும் உதவும். இதன் மூலம் ட்ரோன்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பது குறையும்.

நவீனகால போர் முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிப்பதால், அதி நவீன ட்ரோன்களை தயாரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் டரோன் தயாரிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு இந்திய ராணுவம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

இது மட்டுமில்லாமல் பாகிஸ்தான் மற்றும் உக்ரைன் ட்ரோன்களை முடக்கிய இந்திய தயாரிப்பு டி4 கருவிக்கு அமெரிக்காவைச் சேர்ந்த போர் நிபுணர் ஜான் ஸ்பென்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.எதிரி நாட்டு ட்ரோன்களை முடக்கி செயல் இழக்கச் செய்வதற்காக டி4 என்ற கருவியை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கியது. இதில் எலக்ட்ரானிக் ஜாமர்கள், லேசர் கருவிகள் எதிரி நாட்டு ட்ரோன்களை கண்டுபிடித்து முடக்கும். இவற்றை பெல் நிறுவனம் தயாரித்தது. இந்த டி4 கருவியை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ராணுவம் பயன்படுத்தியது. இது வெற்றிகரமாக செயல்பட்டு பாகிஸ்தான் மற்றும் துருக்கியின் சிறிய ரக ட்ரோன்களை முடக்கியது.

இது குறித்து ரவி ரஞ்சன் என்பவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ இந்தியாவின் டி4 என்ற ட்ரோன் தடுப்பு கருவி தற்போது உலகத்தின் கவனத்தை கவர்ந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இது வெற்றிகரமாக செயல்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டி4, போர்களத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தி, எதிரிகளை அச்சமடையச் செய்தது’’ குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள அமெரிக்க போர் நிபுணரும், நவீன போர் மையத்தின் தலைவருமான ஜான் ஸ்பென்சர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: இந்தியாவின் டி4 ட்ரோன் தடுப்பு ஆயுதத்தின் செயல்பாடு மிகவும் ஈர்த்தது. இந்தியாவை நோக்கி வந்த பாகிஸ்தான் மற்றும் துருக்கி ட்ரோன்களை முடக்கியதில் டி4 முக்கிய பங்காற்றியது. இது போன்ற குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட ட்ரோன் தடுப்பு கருவி அமெரிக்காவின் தெற்கு எல்லை பாதுகாப்புக்கு தேவை’’ என குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதலில், இந்தியா பயன்படுத்தி தொழில்நுட்ப திறன்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் ஜான் ஸ்பென்சரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இவர் ஏற்கெனவே தெரிவித்த கருத்தில், ‘‘ பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை முறியடித்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் எங்கேயும், எப்போதும் இந்தியாவால் தாக்குதல் நடத்த முடியும் என்பது தெளிவாகியுள்ளது’’ என குறிப்பிட்டிருந்தார்.