Cinema

மஞ்சும்மெல் பாய்ஸ் என்னாக போகுதோ..! பொங்குவாரா இளையராஜா..?

Ilayaraja
Ilayaraja

சினிமாவில் இசை ஜாம்பவான் இசைகளுக்கு அரசன் என தமிழ் சினிமாவில் இசைத்துறையில் கொடி கட்டி பறப்பவர் இசைஞானி இளையராஜா. இவரின் இசைக்கு இன்றும் ரசிக்காத மனிதர்களே கிடையாது. அப்படி இருக்கிறயில் இவரை பற்றி பெருமை கொள்வதற்கு பாடலை தவிர வேறு ஏதும் இல்லை. அப்படி தான் அவர் மீது தொடர் விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது. பாடலாசிரியர் முதல் சினிமா பிரபலங்கள் எல்லோரும் ஒவ்வொரு பேட்டிகளிலும் இளையரஜாவிடம் கற்று கொண்டதையும் அவர் திட்டியதையும் கூறுவார்கள் அப்படி ஒரு சம்பவம் தான் தற்பொழுது எழுந்துள்ளது.


இந்நிலையில் மலையாளத்தில் கடந்த மாதம் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் படம் குறைவான பட்ஜெட்டில் வெளியானது. ஆனால் தற்போது பட்டி தொட்டி எங்கும் படம் ஹிட் அடிக்க 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து ரஜினியின் லால் சலாம் படத்திற்கு டப் கொடுப்பதாக இணையத்தில் ட்ரோல் செய்யப்படுகிறது. தமிழில் படம் ஏதும் வெளியாகாமல் இருப்பதால் மலையாள படத்தை தான் தற்போது வெளியிட்டு வருகின்றனர். அந்த படம் வெற்றி பெற காரணமே க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் குணா படத்தின் கண்மணி பாடல்தான். அந்த பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்தவர் இளையராஜா. இந்த படத்தை பார்த்த தமிழ் நடிகர்களும் மஞ்சுமெல் டீமுக்கு பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

கண்மணி பாடல் படத்தில் பயன்படுத்தியது இளையராஜாவிடம் கேட்டு தான் வைத்துள்ளார்களா..? இல்லையென்றால் கண்டிப்பாக இளையராஜா அந்த படத்துக்கு காப்பி ரைட் போடுவதற்கும் கேஷ் போடுவதர்க்கும் வாய்ப்பு இருக்கலாம் என இணையத்தில் கூறப்பட்டது. காரணம் இதேபோல் பழைய சம்பவம் ஒன்றை பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறினார். விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. அந்தப் படம் எந்தளவு வெற்றி என அனைவருக்கும் தெரியும். அந்தப் படத்திலும் ரஜினியின் தளபதி பட ஒரு பாடலை பயன்படுத்தினாராம் 96 படத்தின் இசையமைப்பாளர். 96 படம் எந்த அளவுக்கு பட்டி தொட்டி எங்கும் பரவியதோ அதே போல் இளையராஜா செய்த சம்பவம் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

அதாவது, என் அனுமதியில்லாமல் என் பாட்டை யூஸ் பண்ணிருக்கீயே உனக்கு ஆண்மை இல்லையா?’ என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தாராம் இளையராஜா. உடனே அந்தப் படத்தின் இசையமைப்பாளர் பதிலுக்கு ‘ நான் சிறுவயதில் இருந்தே இளையராஜாவின் பாடலை கேட்டு கேட்டு வளர்ந்தவன். அதனால் ஒரு ரசிகன் என்ற அடிப்படையில்தான் தளபதி பட பாடலை சேர்த்தேன். இருந்தாலும் என்னை மன்னித்துவிடுங்கள்’ என பதிலுக்கு அவரும் ஒரு அறிக்கையை விட்டாராம். அதனால் சேட்டன்கள் இளையராஜா அனுமதி இல்லாமல் பாடலை பயன்படுத்தியிருந்தால் அவ்ளோ தான் என கூறினார் . இதற்கு நெட்டிசன்கள் சேட்டன்கள் ஓவராக துள்ளுகிறார்கள் இளையாராஜா கொஞ்சம் இதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்பது போல் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.