Politics

பவானி பூரில் போட்டியிட்டால் என்ன நடக்கும் மம்தாவிற்கு சுவேந்து அதிகாரி எச்சரிக்கை? முதல்வராக நீடிப்பாரா மம்தா ?

Bavani1
Bavani1

மேற்கு வங்க இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பவானிபூர் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தனது பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தின் பவானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அறிவித்திருக்கிறது, மம்தா பானர்ஜி வெற்றி பெற்றால் மட்டுமே அவரால் முதல்வராக நீடிக்க முடியும்.இதற்கிடையே நேற்று பிரச்சாரத்தை தொடங்கிய  நாடியா பகுதியில் சுவேந்து அதிகாரி பேசியதாவது நந்திகிராம் தொகுதியில் உங்களை யார் போட்டியிட சொன்னது?

எனது கட்சி ஆணையிட்டால் நான் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டால் என்ன நடக்கும்? ஏற்கனவே 1956 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவை வீழ்த்தியுள்ளேன் எனவும் பாஜக வேட்பாளரிடம் மம்தா தோற்பது உறுதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு  வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தன் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியை வீழ்த்துவேன் என களம் இறங்கினார் ஆனால் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். பின் தன் தோல்வியில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பிறகு தற்போது இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது, மம்தா வெற்றி உறுதி செய்யபட்ட ஒன்று என திரிணமூல் கூறிவரும் நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மம்தா முதல்வராக தொடர்வாரா என்ற கேள்வி அதிகரித்துள்ளது.