Cinema

அந்த மனுஷன் பார்த்தாவது திருந்துங்கய்யா....! விஜய் ஆண்டனி செய்த செயலால் சிக்கிய போராளிகள்.....

vijayantony
vijayantony

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சேர்ந்த விஜய் ஆண்டனி தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளராகவும் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். விஜய் ஆண்டனி தனது கல்லூரி படிப்பை முடித்த பின்னர் தாமே ஆடியோ பைல்ஸ் என்று ஒலி அரங்கை நிறுவியவர், மேலும் அங்கு ஒலி பொறியாளராகவே சோதனைகளை செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப் படங்களுக்கும் சில இசை துண்டுகளை அமைத்துக் கொடுத்து பின்னர் இசை அமைப்பாளராக மாறியவர். இதனை அடுத்து இவரது இசையமைப்பில் வெளியான முதல் திரைப்படம் சுக்கிரன் அதனை தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், உத்தமபுத்திரன், நான், சலீம், பிச்சைக்காரன், அங்காடி தெரு போன்ற முக்கிய படங்களிலும் இசையமைத்துள்ளார். இந்த படங்களில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இசையமைப்பில் வெளியான ஐந்து படங்களும் மெகா ஹிட் ஆனதோடு நாக்க முக்கா என்ற பாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது இன்றளவும் மரண குத்துசாங் லிஸ்டில் அனைவரது முதல் தேடலாக இந்த பாடல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடலுக்காக 2009 ஆம் ஆண்டு பிரான்சில் கான் கோல்டன் லயன் விருதை விஜய் ஆண்டனி பெற்றார். 


இசையமைப்பாளராக சில முக்கிய படங்களில் இசையமைத்த விஜய் ஆண்டனி பல புது முகங்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்துள்ளார். இதற்கிடையிலேயே சில படங்களில் நடித்து வந்த விஜய் ஆண்டனி 2016ல் பிச்சைக்காரன் படத்தின் மூலம் தமிழக மக்கள் அனைவரது அன்பையும் பெற்றார் என்று கூறலாம். ஏனென்றால் படத்தில் தாயின் அன்பையும் தாண்டி வேறு எதுவும் கிடையாது என்பதை கூறி கடவுள் நம்பிக்கையும் தெரிவித்து தாயின் மீது கொண்ட அன்பையும் தெரிவித்து இருந்தார், ஆக்ஷன் மற்றும் காமெடி படங்களை வெளியான அந்த சமயத்தில் விஜய் ஆண்டனியின் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து சென்னை சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இவரது மகள் மீரா கடந்த 19ஆம் தேதி அன்று மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.  இந்த செய்தி திரை உலகினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் என்றும் மருத்துவர் தரப்பில் கூறப்பட்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதற்கு முன்பாகவே படப்பிடிப்பில் இவருக்கு பெரிய விபத்து ஏற்பட்டதாகவும் அதனால் விஜய் ஆண்டனி நடித்து வந்த படப்பிடிப்பு அனைத்தும் தாமதமாகனதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சென்னையில் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, கௌதம் வாசுதேவ மேனன், ரியா சுமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹிட்லர் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது அதில் கலந்து கொண்டுள்ள நடிகர் விஜய் ஆண்டனி காரில் இறங்குவதில் இருந்து காலணி அணியாமல் நிகழ்ச்சியை கலந்து கொண்டு மேடையிலும் பேசி பிறகு வீடு திரும்பும் வரை செருப்பு அணியாமல் இருந்தது அனைவரது கவனத்தையும் பெற்றது. இது குறித்த கேள்வியை பத்திரிகையாளர்கள் முன்வைத்த பொழுது திடீரென மனதுக்கு தோன்றியது அதிலிருந்து காலில் செருப்பு அணிவதில்லை மற்றபடி வேறு எந்த ஒரு காரணமும் கிடையாது மீண்டும் எப்பொழுது காலணி அணிய வேண்டும் என்று தோன்றுகிறதோ அன்று பயன்படுத்துவேன் என்று தெரிவித்திருந்தார். கடவுள் இல்லை கடவுள் நம்பிக்கை எல்லாம் பொய் என கடவுள் மறுப்பு வசனங்களை பேசி வரும் தமிழ் நடிகர்கள் மத்தியில் விஜய் ஆண்டனி இப்படி கூறியது...இப்படி ஒரு நடிகரா? என விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.