Cinema

அரசியல் "பொய்யர்" சவுக்கு சங்கர் கைது செய்ய படுகிறாரா? அடுத்தது யார்?

Savuku shankar, sandhiya
Savuku shankar, sandhiya

அரசியல் விமர்சகர் என இணைய ஊடகங்களில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலர் குறித்து பொது வெளியில் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை தெரிவித்து வருபவர் சவுக்கு சங்கர், இவர் மீது பல்வேறு பெண்கள் புகார் கொடுத்த சம்பவமும் அரங்கேறி இருக்கிறது.


இந்த சூழலில் பெண் பத்திரிகையாளர் சந்தியா சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநில மகளிர் ஆணையத்தை நாடி இருக்கிறார், இது குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்தது பின்வருமாறு :- மாநில மகளிர் ஆணையத்தில் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்து இருக்கிறேன்.

கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் என்னை தனிப்பட்ட முறையில் துன்புறுத்துவது, அவதூறு செய்வது, விமர்சனம் செய்வது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதன்காரணமாக, சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் தெரிவித்து இருந்தேன். அதன் மீது இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே, மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்து இருந்தேன்.

அந்தவகையில், இன்று மதியம் 2 மணியளவில் நேரில் ஆஜர் ஆகுமாறு எனக்கு சம்மன் அனுப்பி இருக்கின்றனர். குறைந்தபட்சம் இந்த மன்றமாவது எனக்கு நீதி வழங்கும் என்று நம்புகிறேன். இந்த விஷயத்தில் அனைவரின் ஆதரவையும் கேட்டுக்கொள்கிறேன் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

சவுக்கு சங்கர் மீது இதற்கு முன்னர் பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவரும் புகார் கொடுத்து இருக்கிறார், இதுவரை பல்வேறு புகார்கள் கொடுத்த சூழலில் சவுக்கு சங்கரை காவல்துறை கைது செய்யவில்லை, இந்த சூழலில் பெண் பத்திரிகையாளர் புகாரில் நிச்சயம் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.