Cinema

ரகசியமாக இளம் நடிகையுடன் திருமணம் செய்து கொண்டாரா ஜெய்..!

jai
jai

தமிழ் திரையுலகில் பெருமளவிலான மாஸ் ஹிட் படங்களில் நடிக்காமலும் எதார்த்தமான மற்றும் காதல், காமெடி என பீல் குட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் குறிப்பிடத்தக்க ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ள நடிகர் தான் ஜெய். இவர் தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் இளைய தளபதி ஆன விஜய் உடன் இணைந்து விஜய்க்கு தம்பியாகவே பகவதி திரைப்படத்தின் நடித்த இந்த படத்தில் ஜெய் விஜயை போலவே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது இதற்காகவே ஜெய்க்கு பகவதி திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.  பகவதி படத்திற்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தில் நடித்த ஜெய் இளைஞர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றிருந்தார். 


இதற்கு அடுத்ததாக இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் ஜெய் நடித்தது அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் ஜெய் தனது காதல் காட்சிகளையும் சண்டைக் காட்சிகளையும் நேர்த்தியாக நடித்து கலக்கியிருப்பார். சுப்ரமணியபுரம் திரைப்படம் ஜெயின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திரைப்படமாகவே பார்க்கப்பட்டது இருப்பினும் இந்த படத்திற்குப் பிறகு ஜெய்யின் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ஒரு நல்ல வெற்றியை ஜெய்யிக்கு கொடுக்காமல் இருந்தது. இதற்கிடையில் ஜெயில் நடிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தில் ஜெய் ஒரு அப்பாவியான நடிகராக திறம்பட தன்னை காட்டி இருப்பார் என்பதும் பாராட்டை பெற்றது. அதோடு இந்த படத்தில் ஜெயித்த ஜோடியாக நடித்த அஞ்சலியை காதலித்து வருவதாகவும் கிசு கிசுக்கப்பட்டது. 

இருப்பினும் சுப்பிரமணியபுரம் படத்தைப் போன்ற அடுத்த ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக தனது நடிப்பில் கவனம் செலுத்தி வந்த ஜெயிக்கு அட்லி இயக்கத்தில் ராஜா ராணி திரைப்படத்தின் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் தமிழ் திரை உலகில் முக்கிய நடிகையாகவும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆகவும் உள்ள நயன்தாராவிற்கு ஜோடியாக நடித்தார் ஜெய்! மேலும் இந்த படம் ஜெயித்து எப்படி ஒரு திருப்தத்தை கொடுத்ததோ அதேபோன்று நடிகை நயன்தாராவிற்கும் நல்ல திருப்பத்தை கொடுத்தது. ஏனென்றால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா ராஜா ராணி திரைப்படத்தில் நடித்திருப்பார்,. இவ்விருவரின் கூட்டணியும் ராஜா ராணி திரைப்படத்தில் நல்ல வரவேற்பு பெற்றிருந்ததோடு மீண்டும் இவர்களது ஜோடியானது சமீபத்தில் வெளியான அன்னபூரணி திரைப்படத்திலும் சாத்தியமானது. 

மேலும் வெப் சீரியஸிலும் கவனம் செலுத்தி வரும் ஜெய் சமீபத்தில்  ஜெயின் அடிப்பையில் வெளியான லேபிள் என்ற சீரியஸும் ஓ டி டி தளத்தில் வெளியானது. இப்படி திரையுலகில் தனது அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஜெய் எப்பொழுது திருமணம் செய்து கொள்வார் என்ற பேச்சுகள் அவ்வப்போது எழுந்த வண்ணமே உள்ளது.. இந்த நிலையில் ஜெய் ஒரு இளம் நடிகையுடன் திருமணம் செய்து கொண்டு ஹனிமூனுக்குச் சொல்ல இருப்பதாக ஜெய்யே வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 அதாவது பிரபல இளம் நடிகையாக உள்ள பிரகியா நாக்ராவுடன் ஜெய் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை போட்டு உள்ளார் அதில் பிரக்யா தாலியோடு இருக்க ஜெய் தன்னுடைய கையில் பாஸ்போர்ட்டை வைத்து ஹனிமூன் பயணிக்க உள்ளதை போன்ற புகைப்படத்தையும் கடவுளின் ஆசியோடு புதிய வாழ்க்கை ஆரம்பம் என்ற ஒரு கேப்சனையும் அவர் கொடுத்திருந்தார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் இது நிஜமா அல்லது திரைப்பட புரமோஷன்காகவா என்ற குழப்பத்தில் ஜெய்யை குறித்த தகவல்களை இணையதளங்களில் தேடி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்த உண்மையான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஜெய் பிரக்யா நாக்ரா இருவரும் ஜோடியாக நடித்து வரும் பேபி அண்ட் பேபி என்ற படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது தான் இந்த புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது.