Cinema

சூர்யாவை பார்த்து ஏன் நித்தியானந்தா இப்படி சொல்லிவிட்டார் ரசிகர்கள் ஆதரவாளர்கள் அதிர்ச்சி!

suriya and jaibheem
suriya and jaibheem

ஜெய்பீம் விவகாரம் குறித்து வீடியோ அல்லது அது குறித்த அனைத்து விவாகரங்களையும் முன்னிலை படுத்த வேண்டாம் என முக்கிய தரப்பில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக.,


முன்னணி ஊடகங்கள் மற்றும் பிரபல யூடூப் சேனல்கள் போன்றவை ஜெய்பீம் குறித்து வாய் திறக்கவில்லை இப்படி விஷயத்தை மூட சூர்யா தரப்பு முயற்சி செய்ய, பாதிக்கப்பட்ட தரப்பு சூர்யா வருத்தம் தெரிவிக்கும் வரை விடப்போவதில்லை என பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ளது இதனால் தற்போதுவரை அணையாத நெருப்பாக எரிந்து கொண்டு இருக்கிறது ஜெய்பீம் விவகாரம்.

இப்படி ஒருபுறம் தமிழகத்தில் போராட்டம் வெடித்து கொண்டு இருக்க கைலாச நாட்டில் இருந்து நித்தியானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்  அதில் , ‘என்னோட வாழ்க்கையை பாருங்கள். இளமை பருவத்தில் வீடு வீடாக பிச்சை எடுத்து இந்து மதத்துக்காக ஒரு வீடு கட்டினேன். இருபது வயதில் தெருத்தெருவாக பிச்சை எடுத்து இந்து மதத்துக்காக ஒரு தெருவையே கட்டிவிட்டேன்.

முப்பது வயதில் ஊர் ஊராக பிச்சை எடுத்து இந்து மதத்துக்காக ஒரு ஊரையே கட்டிட்டேன். நாற்பது வயதில் நாடு நாடாக பிச்சை எடுத்து இந்து மதத்துக்காக ஒரு நாட்டையே கட்டிட்டேன்’ என நித்தியானந்தா கூறியுள்ளார். ஜெய் பீம் பட சர்ச்சை குறித்து பதிலளித்த அவர், வன்னியக்குடிகளை இழிவுபடுத்தி தான் சூர்யா தனது குடும்பத்தினரின் வயிற்றைக் கழுவ வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சூர்யா குடும்பத்தை வயிற்றை கழுவ வேண்டுமா என நிதியானந்தா விமர்சனம் செய்து இருப்பது கடும் எரிச்சலை சூர்யா ரசிகர்கள் மற்றும் ஜெய்பீம் படத்திற்காக சூர்யாவை ஆதரித்தவர்கள் இடையே எழுப்பியுள்ளது பலரும் நித்தியானந்தாவை விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் நித்தியானந்தா கருத்திற்கு ஆதரவாகவும் கருத்துக்களை சூர்யாவின் எதிர்தரப்பினர் கொடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.