Cinema

நீங்க "விளக்கு பிடித்தீர்களா" திராவிடவாதியை வெளுத்து எடுத்த நடிகை கஸ்தூரி...!

Kasthuri
Kasthuri

தமிழக அரசியல் சூழலில் வெளிப்படையாக முகநூலில் கருத்து தெரிவிக்கும் திரை துறையை சார்ந்தவர்கள் வெகு சிலரே அதில் அதிரடியாக கருத்து தெரிவிப்பவர்களில் ஒருவர் நடிகை கஸ்தூரி, தனக்கு தோன்றியதை ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக கேள்வி எழுப்புவதுடன் பதில் சொல்லியும் விடுவார்.


அந்த வகையில் திராவிட ஸ்டாக் குழுவினர் வழக்கம் போல் பிராமணர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் அவர்களால் தான் இத்தனை பிரச்சனை என்று கூற அதற்கு முறையான பதிலடி கொடுத்துள்ளார் கஸ்தூரி, பதிலடி என்று கூறுவதை காட்டிலும் செருப்படி என்றே கூறலாம், ட்விட்டரில் அபு காலித் என்ற நபர் இன்று இந்திய நிலபரப்பில் நடைபெறும் அனைத்து பிரச்சனைக்கும் இந்த மலைப்பாதைதான் காரணம் என கைபர் கணவாய் படத்தை போட்டு கஸ்தூரியை வம்பு இழுத்தார்.


அதற்கு கஸ்தூரி, உண்மைதான். ஆனா நீங்க சொன்ன கால விவரம் தப்பு.  3000 ஆண்டுகள் அல்ல. 800 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய பிரச்சினை. 

கைபர் கணவாய் பாகிஸ்தானுக்கு போய்விட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு போக வேண்டியதெல்லாம் இங்கே உட்கார்ந்து விஷம் விதைக்கிறதுகள் என ஒரே போடாக போட்டு நெத்தியடி பதில் கொடுத்தார் அதோடு நில்லாமல்.,

3000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு அரசர்களால் வரவழைக்கப்பட்டு ,  தமிழ் மொழி,உடை,  உணவு,  விழா  கடவுள்  என அனைத்திலும் தமிழராய் வாழ்ந்து  தமிழ்நாட்டுக்கும் தாய்நாட்டுக்கும் தொண்டு செய்தவர்கள் வந்தேறி  எனில் 

கடவுள் , மொழி, பெயர் எல்லாவற்றிலும் அன்னியத்தை  ஏற்றுக்கொண்டவர்களை ஓடுகாலி எனலாமா  எனலாமா எனவும் கஸ்தூரி கேள்வி எழுப்பினார் இந்த கேள்வி பலருக்கு விழுந்த சவுக்கடியாக பார்க்க படுகிறது.

இவை அனைத்தையும் கிங் DMK என்ற நபர் நோபல் பரிசு வாங்கியவர்கள் சிலரது பெயரை குறிப்பிட்டு அவர்கள் நோபல் பரிசு வாங்கிய போது பிராமணர்கள் மணியாட்டி கொண்டு இருந்தார்கள் என கிண்டல் செய்தார் அதற்கு கஸ்தூரி கொடுத்த பதிலடியை பார்த்து மனிதன் ஓடி போய்விட்டார், பரவாயில்லை மணியாட்டி கொண்டே பிராமணர்கள் 5,6 நோபல் பரிசுகளை வாங்கிவிட்டார்கள்.

ஆனால் நீங்கள் என்ன செஞ்சீர்கள் விளக்கு பிடித்தீர்கள் இதுதான் சுய மரியாதை பகுத்தறிவா என கஸ்தூரி ட்விட்டரில் தன்னிடம் கேள்வி எழுப்பிய நபர்களை வெளுத்து எடுத்து விட்டார் மொத்தத்தில் திராவிட ஸ்டாக்கள் கஸ்தூரியிடம் வாயை கொடுத்து இரண்டு மடங்காக வாங்கி கட்டி கொண்டு இருக்கிறார்கள்.