Cinema

அமைச்சர் பொன்முடிக்கு "பொளேர் கொடுத்த" நடிகை யாஷிகா ஆனந்த் !

credit NEWS18 TAMIL AND GOOGLE
credit NEWS18 TAMIL AND GOOGLE

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு நடிகை யாஷிகா ஆனந்த் பதிலடி கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது,இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசின் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பொன்முடி கோவையில் நடைபெற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது 'ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என சொல்கிறார்கள்.


ஆனால் இங்கே பானி பூரி விற்பவர்கள் யார்' என கேள்வி எழுப்பி இருந்தார்.இது வடநாட்டு மீடியாக்களில் பெரிய அளவில் சர்ச்சையாக்கப்பட்டது, மேலும் பல்வேறு தரப்பும்  இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.ஹிந்தி பேசுபவர்கள் எல்லோரையுமே அவர் பானி பூரி விற்பவர்கள் என சொல்லிவிட்டார் என பலரும் அவருக்கு எதிராக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தும் திமுக அமைச்சருக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டு இருக்கிறார். "ஒருவரது மொழிக்கும் வேலைக்கும் எந்த தொடர்பும் இல்லை சார். எல்லோரும் வாழ தேவையான பணம் சம்பாதிக்க தான் முயற்சி செய்கிறார்கள். யாருடைய திறமையையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.""டீ விற்றவர் தற்போது நாட்டை ஆள்கிறார்.

பானி பூரி விற்பவரும் குறைந்தவர் அல்ல. அவர்களை கிண்டல் செய்யாதீர்கள்" என யாஷிகா குறிப்பிட்டு உள்ளார். செய்யும் தொழிலை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் நடிகை யாஷிகாவும் சமூக வலைத்தளம் மூலம் பொளேர் என ஒரு அடி அடித்துள்ளார் என்றே கூறவேண்டும்.தமிழக அமைச்சர்கள் பலரும் தங்கள் பேச்சுக்கள் மூலம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருவதும் பொதுமக்கள் முதல் பல்வேறு தரப்பினரிட