24 special

துரத்திய கிறிஸ்தவர்கள் திமுக செய்த காரியம்!

udhayanithi  , church
udhayanithi , church

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கிறிஸ்தவ அமைப்பினர், திராவிட இயக்கங்களுக்கெல்லாம் கிறிஸ்தவ மக்கள் மயங்க மாட்டார்கள்! ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள்! முதலில் கூறியபடியே சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டக்காரன் காலில் விழுவது மேல், பாஜகவுடன் நாங்கள் நட்பாகி விட்டால் எங்களுக்கு என்ன எதிர்ப்பு வரப்போகிறது! வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அருமை மிக பிரதமர் நல்ல ஆட்சி! ஊழலற்ற ஆட்சி!  நிர்வாக திறன் வெளிநாடுகளில் நம் நாட்டை வல்லரசாகியது! விண்வெளியிலும் நம் நாட்டை வல்லரசாகியது, விவசாயிகளுக்கு 6000 ரூபாய் இவ்வளவு உதவிகளை செய்பவருக்கு நாங்கள் ஏன் ஆதரவு கொடுக்கக் கூடாது? இப்படியே தொடர்ச்சியாக திராவிட இயக்கங்களுக்கு ஓட்டு போட்டு போட்டு தான் இவர்கள் சம்பாதித்து பிணம் வைக்க வேண்டிய பெட்டியில் பணத்தை வைக்கிறார்கள்! ஒரு வேளை சோற்றுக்காக ஏழை மக்கள் சாகிறார்கள்! எங்க இருந்து உங்களுக்கு வந்தது பணம்?


இவை அனைத்தையும் இளைஞர்கள் கேட்கிறார்கள் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகிறது! இனி ஏமாற்ற முடியாது இந்த திராவிட இயக்கங்களின் மாயயை முடிந்தது, திராவிட இயக்கங்களுடைய கொள்ளையடிக்க கூடிய சூழ்நிலை முடிந்து போனது, அதனால் இந்த தேர்தலில் மிகப்பெரிய முடிவு உண்டு மாறுதல் உண்டு!எலெக்ஷன் நேரங்களில் அனைவரிடத்தில் நான் விசாரிப்பது உண்டு 50 சதவீத மக்கள் தாமரைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள், இது தான் உண்மை அனைவரும் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டார்கள்! இதனையே நாங்கள் முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொண்டு எங்களுடைய பிரதமர் பேராயர் அருள் திரு கே ஜெய் சிங் அவர்களின் கூற்றின்படியும் கருத்தின் படியும் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரதிய ஜனதா கட்சியை ஆதரிப்பதோடு மாண்புமிகு பிரதமராக நரேந்திர மோடி  அவர்களின் கரத்தைப் பற்றி இந்த தமிழகத்தில் இருக்கக்கூடிய தலைவர் முன்னாள் காவல்துறை அதிகாரி அண்ணாமலை அவர்களுக்கு கிறிஸ்தவ மக்களின் ஆதரவு உண்டு என்று தெரிவித்தனர். இப்படி ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்தினரும் பாரதிய ஜனதா கட்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆதரவளிப்பதாக பகிரங்கமாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெட்ட வெளிச்சமாக கூறியது திமுக தரப்பையும் அதன் கூட்டணி கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இந்த நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ ஐ டி விங் நிர்வாகியாக இருக்கக்கூடிய இசை என்பவர், கிறிஸ்தவர்களை கிண்டல் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்த பெண் ஒருவர் நான் தற்பொழுது ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறி நாங்கள் கனடா தேசத்திற்கு போன பொழுது தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் விடுதிகளில் தங்கி இருந்தோம் நீண்ட நாட்களாக விடுதிகளிலே தங்கி பிறகுதான் எங்களுக்கு வீடே கிடைத்தது. அதற்குப் பிறகு கடவுளின் கிருபையாலே எங்களுக்கு காரும் கிடைத்தது. அப்படி நாங்கள் கார் வாங்குவதற்கு முந்தைய நாள் இரவில் என் கனவில் ஒரு தேவதை வந்து என்னிடம் உனக்கு எப்படிப்பட்ட கார் வேண்டும் என்று கேட்டது அதற்கு நான் சீக்கிரமாக செல்லும் சீக்கிரம் என்ற வகையிலே கூறியதால் எப்படிப்பட்ட கார் என்பதை காண்பிப்பதற்காக நான் ஒரு மாதிரி புகைப்படத்தையும் காட்டியிருந்தேன் அதை வாங்கிக் கொண்ட தேவதூதர் அங்கிருந்து மறைந்து சென்றார் அடுத்த நாள் காலையில் பார்த்தால் என் கணவர் அவர் வாயாலே இதனை எழுந்தவுடன் என்னிடம் கேட்கிறார் உனக்கு எப்படிப்பட்ட கார் வேண்டும் என்று நான் அதே மாதிரி கூற அதேபோன்ற ஒரு காரை அன்றைய தினமே என்னை அழைத்துக் கொண்டு சென்று வாங்கி கொடுத்தார் இதுவே கடவுளின் கிருபை என்று தனது மதத்தின் நம்பிக்கையால் கிடைத்த வீடு மற்றும் காரை பற்றி கிறிஸ்தவ பெண் ஒருவர் பிரசங்கம் பண்ணும் வீடியோவை திமுக ஐடி வின் நிர்வாகியான இசை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டதோடு அதற்கு அவ நகைச்சுவையின் உச்சம் என்று பதிவிட்டுள்ளார்! இதனால் கிறிஸ்தவர்களுக்கு திமுக மீது இருந்த கோபம் உச்சத்தை பெற்றதோடு இதெல்லாம் அவர்களுக்கு தேவையா இதன் வெளிப்பாடுகளை தேர்தலில் அவர்கள் சந்திப்பார்கள் என்று இணையத்தில் கமெண்ட்களை பறக்க விடுகின்றனர்.