Cinema

அடப்பாவிகளா இது என்னடா புதுசா இருக்கு!! திரையுலகத்திற்கு வந்த சோதனை!!

LOKESH KANAGARAJ
LOKESH KANAGARAJ

காலத்திற்கு ஏற்ப மனிதர்களும் அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் வேலைகள் சம்பந்தமான அனைத்தும் அடுத்தடுத்த மாறிக்கொண்டே தான் இருக்கின்றது. முன்பெல்லாம்... நான் படிக்க முடித்து டாக்டர் ஆகவோ கலெக்டராகவோ இன்ஜினியர் ஆகவோ ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது!! உங்களின் ஆசை என்ன??? நீங்கள் என்னவாகப் விரும்புகிறீர்கள்?? என்று கேட்டால் பெரும்பாலானோர் நான் டாக்டராக போகின்றேன்!!! நான் கலெக்டராக போகின்றேன் என்றும் கூறி வருவது மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் இன்றைய காலங்களிலோ இப்படி கூறுவது அவுட் ஆப் பேஷனாக மாறி... நான் நடிகர் நடிகையாக ஆகப்போகின்றேன்!! என பலர் கூறுகின்றனர். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அந்தக் காலத்தில் அதிக அளவில் டெக்னாலஜி இல்லாத போதிலுமே சினிமா துறையில்  பெரும்பாலானோர்  நடித்து வந்தனர்.


ஆனால் இன்றைய நிலையில் டெக்னாலஜியும், சோசியல் மீடியாக்களும் பரவி வரும் நேரத்தில் அதற்கு ஏற்றார் போல் மக்களும் அவர்களின் மனநிலையினை மாற்றிக் கொள்கின்றனர். நடிப்பதற்காக சிலர் அது சம்பந்தப்பட்ட படிப்புகளை கூட படிக்கின்றனர். தொடர்ச்சியாக பல படங்கள் நடித்து அதன் மூலம் பேரும் புகழும் பெற வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் ஆசையாகவும் கனவாகவும் உள்ளது.  இன்றைய காலங்களில் எந்த அளவுக்கு சினிமா துறை வளர்ந்து வருகிறதோ, அதே அளவுக்கு அந்தத் துறையில் மிகவும் ஆபத்துக்களும் நிறைந்துள்ளது. இதில் நடிப்பவர்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளும்  அதிகமாக காணப்படும். இருப்பினும் சிலர் இந்த துறையினை விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர். காரணம் அவர்களுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது தான். அனைவரும் எப்படியாவது ஒரு கதையில் கதாபாத்திரமாக நடித்திட வேண்டும் என்று முயற்சிக்கும் போது பெரிய அளவில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அவர்களுக்கு அது பெரிய வரமாகவே இருக்கும். இதனை பயன்படுத்தி சிலர் நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களாய் பார்த்து அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றும் நபர்கள் இன்று அதிகமாக பெருகி வருகின்றனர்.

ஏதேனும் பிரபல நடிகர்கள் நடிகைகளின் பெயர்களை கூறி அவர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பினை உருவாக்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுவிட்டு அதன் பின் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் அவர்கள் காணாமல் போய்விடுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறும் வார்த்தைகளை நம்பி தங்கள் பணத்தினை இழந்து விட்டு அவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று தெரியாமல் பலர் மன அழுத்தத்திற்கு செல்கின்றனர். சினிமாவில் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா!!! எப்படியாவது நமது முகம் திரையில் பார்த்திட முடியாதா என்று ஏங்கும் பலரும், உடனடியாக பிரபலமாக வேண்டும் என்று நினைத்து அவசர கோளாறில் தங்கள் பணத்தினை  ஆசை வார்த்தை கூறும் நபர்களிடம் இழந்து விட்டு அதன் பின்  புலம்பித் தள்ளுகின்றனர்  இன்றைய இளைஞர்கள்!! இதுபோலவே தான் தற்போது ஒரு நபர் ஏமாற்றியுள்ளார்!! இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!! அது என்னவென்றால்...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தில் நடிக்க நடிகர் நடிகைகள் தேவை என பொய்யான விளம்பரம் செய்து பெங்களூரில் உள்ள ஒரு இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி முக்கிய கதாபாத்திரம் தருவதாகவும், மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன்  நேரடியாக இணைந்து நடிக்கும் கதாபாத்திரங்கள் இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் படத்தின் போஸ்டர்களை பதிவிட்டு மோசடி செய்துள்ளனர்!!! இது தொடர்பாக சுரேஸ் என்பவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து போலீஸ் விசாரணையில் இது போலியான விளம்பரம் என்றும் இப்படி ஒரு பொய்யான விளம்பரத்தை காட்டி பலரிடம் அந்த நபர் பணத்தினை வாங்கிவிட்டு தலைமறைவு ஆகிவிட்டார் என கூறுகின்றனர். அதனால் சினிமாவில் நடிக்க நினைப்பவர்கள் கவனத்தோடு தனது கனவை எட்ட வேண்டும் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது.