
தமிழகத்தில், லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதுமட்டுமா பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகி உள்ளது. தினமும் பாலியல் வன்கொடுமை செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் சிறு குற்றம் நடந்தாலும் பொங்கி எழுந்தவர்கள் எல்லாம் எங்கே சென்று ஒளிந்து கொண்டார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில் :
இதற்கிடையில் விழுப்புரம் மத்திய மாவட்டத் திமுக ஒன்றியச் செயலாளரான திருவக்கரை திரு. பாஸ்கரன் என்பவர் கடந்த ஆறு மாதங்களாகத் தன்னை மிரட்டி, பலவந்தமாகத் தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ள காணொளி காண்போரைப் பதற வைக்கிறது. தமிழகப் பெண்களை வேட்டையாடுவதையே வழக்கமாய் வைத்துள்ள திமுக உடன்பிறப்புகளின் கோரமுகத்தையே இச்சம்பவம் நமக்கு மீண்டுமொருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
“தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்” என்ற கதையாக, திமுககாரன் என்பதே குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறிவிட்டது. ரவுடியிசம், போதைப்பொருள் கடத்தல், மணல் கடத்தல், கள்ளச்சாராய விற்பனை உள்ளிட்ட அனைத்து சட்டவிரோத செயல்பாடுகளிலும் கொடிகட்டிப் பறக்கும் திமுக உடன்பிறப்புகள், ஆட்சி கையிலிருக்கும் மமதையில் தமிழகப் பெண்களையும் தேடித்தேடி சீரழிப்பதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது.
காலங்காலமாக பெண்களை மட்டம் தட்டுவதையும், இரட்டை அர்த்த வசனங்களையும் ரசிக்கும் ஒரு கூட்டத்திடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தால் என்னவாகும் என்பதைத் தமிழக மக்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள், செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்வதற்காக வரும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி தவம் கிடக்கிறார்கள். கயவர்களின் கூடாரமான திமுக அரசு அதன் ஆணவத்தாலேயே வீழப்போவது உறுதி!
மேலும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள தர்காவில் அஸ்ரத் ஆக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் அஜீஸ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று புனித நீர் தெளிப்பதற்காகக் குழந்தையுடன் தர்காவிற்கு வந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, கத்தியால் குத்தி தாக்கியதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடும் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கும் பாதிக்கப்பட்ட அப்பெண் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
படிக்கும் பள்ளி முதல் புனிதமான பள்ளிவாசல் வரை பாலியல் கரங்கள் பெண்களைத் தொடர்கிறது என்றால் திமுக அரசையும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டம் ஒழுங்கையும் குற்றவாளிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று தானே அர்த்தம்? அதிலும் அப்துல் அஜீஸ் மீது ஏற்கனவே பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகச் செய்திகள் உலா வரும் நிலையில், அவர் தர்காவின் தலைவராக எப்படி நியமிக்கப்பட்டார்?
மேலும், விருதுநகர் மாவட்டத்தையே பதற்றத்தில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவத்தைப் பற்றி திமுகவின் போலி பெண் போராளிகளும், பிற தலைவர்களும் இதுவரை வாய் திறக்காதது ஏன்? இஸ்லாமிய மக்களின் ஓட்டு வங்கி அடி வாங்கிவிடும் என்ற அச்சமா? அல்லது வழக்கம்போல இந்தப் பாலியல் வழக்கிலும் உடன்பிறப்புகள் ஒளிந்துள்ளனரா?
சமூகநீதி, மத நல்லிணக்கம் குறித்தெல்லாம் பிறருக்கு வகுப்பெடுக்கும் திமுக அரசு, இந்த விவகாரத்தை எவ்வித சமரசமுமின்றி அணுக வேண்டும் எனவும், குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டுமெனவும் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்
