24 special

ஈபிள் டவரை விட உயரம் ! எதையும் தாங்கும் திறன்! இந்தியாவை பார்த்து வியக்கும் உலகம்! ஆங்கிலேயர்களால் கூட முடியாததை முடித்த மோடி!

pmmodi,railwaybridge
pmmodi,railwaybridge

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி பகுதிகளுக்கு இடையே சிந்து நதியின் துணை நதியான செனாப் நதியின் குறுக்கே புதிய பாலம் கட்ட கடந்த 2002-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2004-ம் ஆண்டில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. அடுத்து காங்கிரஸ் பத்து ஆண்டுகால ஆட்சியில் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து . வடக்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் வருகிறது. எனினும் மலைப் பகுதி என்பதால் செனாப் ரயில் பாலம் கட்டும் பணி கொங்கன் ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு பாலம் கட்டும் பணி வேகம் சூடு பிடிக்க தொடங்கியது


சுமார் 15 ஆண்டுகள் உழைப்பில், ரூ.1,486 கோடி செலவில் 1,315 மீட்டர் நீளம், 13.5 மீட்டர் அகலம், 359 மீட்டர் உயரத்தில் செனாப் ரயில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இது பிரான்ஸின் ஈபிள் கோபுரத்தைவிட ( 330 மீட்டர்) உயரமானது. உலகிலேயே மிகவும் உயரமான ரயில்வே பாலம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

செனாப் ரயில் பாலத்தில் நேற்று காலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பாலத்தின் மீது தேசிய கொடியை ஏந்தி சென்றார்.

இதனை தொடர்ந்து அஞ்ஜி தொங்கு பாலம் திறப்பு: செனாப் ரயில் பாலத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் கத்ரா-பெனிகால் இடையே ரூ.435 கோடி செலவில் அஞ்ஜி தொங்கு பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் 725 மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த பாலத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இது இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலம் ஆகும். இதன் உயரம் 77 மாடிகளுக்கு இணையானது.

சவாலான மலைப் பகுதியில் வெற்றிகரமாக ரயில் பாதையை அமைத்து உள்ளோம். இந்த பாதையில் செனாப் மற்றும் அஞ்ஜி பாலங்களும் திறக்கப்பட்டு உள்ளன. இது இந்தியாவின் தொழில்நுட்ப திறனை பறைசாற்றுகிறது. புதிய வழித்தடத்தில் கத்ரா- ஸ்ரீநகர் இடையே இரு வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கனவு, நனவாகி உள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்கின்றனர். அதைவிட செனாப் ரயில் பாலம் உயரமானது ஆகும். இனிமேல் இந்த பாலத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிவார்கள். மேலும் இந்தியாவின் முதல் அஞ்ஜி தொங்கு ரயில் பாலத்தையும் வெற்றிகரமாக கட்டி உள்ளோம். இதுவும் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறும். புதிய ரயில் சேவையால் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா மட்டுமன்றி, தொழில் துறையும் அபார வளர்ச்சி அடையும். காஷ்மீர் ஆப்பிள்கள், உலர்ந்த பழங்கள், காஷ்மீர் குங்குமம், மூலிகைகள் உள்ளிட்டவை ரயில்கள் மூலம் நாட்டின் இதர பகுதிகளுக்கு எளிதாக எடுத்துச் செல்லப்படும்.

செனாப் பாலத்தின் சிறப்பு அம்சங்கள்:சர்வதேச அரங்கில் செனாப் ரயில் பாலம் இன்ஜினீயரிங் அதிசயம் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த பாலம் 120 ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்து நிற்கும். ரிக்டர் அலகில் 8 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால் கூட செனாப் பாலத்துக்கு சிறுசேதம் கூட ஏற்படாது. 40 கிலோ வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தினால்கூட பாலத்தை தகர்க்க முடியாது. கடுமையான குளிர்காலத்திலும் செனாப் பாலம் வழியாக ரயில்களை இயக்க முடியும்.செனால் ரயில் பாலம் பகுதியில் ஆண்டு முழுவதும் பலத்த காற்று வீசுகிறது. இதை கருத்தில் கொண்டு 266 கி.மீ. வேகத்தில் காற்று வீசினால்கூட எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பத்தில் பாலம் கட்டப்பட்டு இருக்கிறது.

வடக்கிழக்கில் சிலிகுரி பகுதி, கோழி கழுத்து பகுதி என்று அழைக்கப்படுகிறது. இதேபோன்று ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியும் கோழி கழுத்து பகுதி என்று அழைக்கப்படுகிறது. ராணுவரீதியாக இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.இங்கு செனாப் ரயில் பாலம் கட்டப்பட்டிருப்பது பாகிஸ்தான், சீனாவுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட சவால் ஆகும். பாகிஸ்தான் எல்லை பகுதி இங்கிருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ளது. போர்க்காலங்களில் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், ஆயுதங்களை ரயில் பாதை மூலம் மிக எளிதாக எல்லைப் பகுதிக்கு எடுத்துச் செல்ல முடியும். எனவே பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு இணையாக ராணுவ ரீதியாகவும் புதிய ரயில் பாதை மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.