Cinema

இவர் பாவம் மணிரத்தினத்தை சும்மா விடாது... பொன்னியின் செல்வன்.. தடாலடி வைரல் !

Ponniyin selvan
Ponniyin selvan

சமீபத்தில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது, மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் அரசியல் மத்தியில் இயக்குனர் வெற்றிமாறன் பேச்சின் மூலம் பேசுபொருளாக மாறி இருக்கும் சூழலில் பலரும் அப்படி என்னதான் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருக்கிறது என பார்க்க திரையரங்கு நோக்கி பயணித்து வருகின்றனர்.


அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த சிவகுமார் வெங்கடாசலம் என்பவர் சமூக வலைத்தளங்களில் எழுதிய விமர்சனம் வைரலாகி வருகிறது  அதில், படத்தில் ஆடியன்ஸுக்கு அடுத்ததாக உண்மையிலேயே பாவம் மோகன்ராம்தான்.

சமீபத்தில் யூட்யூபில் இவர் அளித்த பேட்டியொன்றில் தனக்கும் மணிரத்னத்துக்கும் பஜாஜ் ஸ்கூட்டர் ஓட்டும் காலந்தொட்டு பழக்கம் என்றும், இதுவரை ஒரு அவர் படத்தில் நடிக்க அழைக்கவில்லை நானும் கேட்கவில்லையென்றும் சொன்னவர், பொன்னியின் செல்வனுக்காக 'தாடி வளங்க' என்று மணி சொன்னதும் வருடக்கணக்கில் சிரத்தையோடு தாடி வளர்த்ததாகச் சொன்னார்.

படத்தில் மெயின் கேரக்டர்களே ஒட்டு மீசை தாடி வைத்து டேஷ்  பஜனை பாடியிருக்க, ஒன்னரை நிமிட ஒப்புக்குச் சப்பான் காட்சிக்காக சொறி படை அரிப்புகளை தாங்கிக்கொண்டு வருடக்கணக்கில் வளர்த்திருக்கிறார்.இவர் பாவம் மணியை சும்மா விடாது, விடக்கூடாது என குறிப்பிட்டு இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவருக்கானா முக்கியத்துவம் எங்குமே இல்லை என்பதும் வெறும் ஒருநிமிட காட்சிக்கா இத்தனை நாட்களாக அவர் சிரமப்பட்டார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, இந்த சூழலில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இவருக்கானா முக்கியத்துவம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.