24 special

உதயநிதி செய்த நம்பிக்கை துரோகம்... மன்சூர் அலிகான் ஓபன் டாக்..!

Mansoor ali khan, Udhayanithi
Mansoor ali khan, Udhayanithi

நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயகப் புலிகள் பொதுக்கூட்டம் கீழக்கரையில் நடைபெற்றது. இதில் பேசிய மன்சூர் அலிகான் தமிழகத்தில் உள்ள திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக அமைச்சர் உதயநிதியை நம்பி தனது தொகை முழுவதும் இழப்பு ஏற்பட்டு விட்டதாக கண்கலங்கி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  


தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகராக பெயர் பெற்றவர் மன்சூர் அலிகான். தற்போது சினிமாவில் பெரிய அளவில் அவருக்கு முக்கியத்துவம் ஏற்படவில்லை. சமீபத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்க்கு இணையாக நடித்திருப்பார். அதன் பிறகு நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் தனது கட்சியின் பெயரை 'இந்திய ஜனநாயக புலிகள்' என மாற்றி தேசிய அரசியலில் குதித்துள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.  இதற்காக முக்கியமான ஐந்து தொகுதிகளை தேர்தெடுத்திருப்பதாக அவரே கூறினார். 

இந்நிலையில், மன்சூர் அலிகான் தனது இந்திய ஜனநாயகப் புலிகள் பொதுக்கூட்டத்தில்இந்தியாவிலும் தமிழகத்திலும் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்த அரசியலால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை கோடி கோடியாக கொள்ளையடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் இன்னும் தமிழக மக்களை ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்கிறார்கள்  என்று ஆளும் திமுக கட்சியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், அவரிடம் அவர் நடித்த சரக்கு படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “சரக்கு படத்தை ரூ.4 கோடி போட்டு எடுத்தேன். ஆளும்கட்சியின் ஆதிக்கம் காரணமாக எனக்கு போதுமான திரையரங்கு கிடைக்கவில்லை. தம்பி உதயநிதியை பலமுறை நேரில் போய் பார்த்தேன்.அவர் ஓடிடியில் வெளியிடுவோம், தியேட்டர்கள் கிடைக்கச் செய்வோம் என கூறினார். ஆனால், அட்னன் பிறகு யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.  அதேமாதிரி ஓடிடியிலும் வெளியிட முடியவில்லை. அந்த நேரம் பார்க்க கேப்டன் விஜயகாந்தின் மறைவு வேறு நடந்தது. ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் தான் தியேட்டர்கள், விநியோகஸ்தர்கள் எல்லாம் இருக்கிறார்கள். முன்னமாதிரி எதுவும் இல்ல. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் எல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கு. இதை அப்படியே அனுமதிக்க முடியாது. அதை இனிமேல் பார்த்துக்கலாம்” என தெரிவித்தார். 

மன்சூர் அலிகான் பேசியது காண்போரை கண் கலங்க செய்துள்ளது. எப்போதும் தனது கெத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் மன்சூர். உதயநிதியிடம் உதவி கேட்டும் செய்யாமல் இருப்பது, அவரின் அதிகார திமிரை காட்டுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். சினிமா துறையில் தயாரிப்பாளருக்கு உதவி செய்வது போன்ற விஷயத்தில் ஆற்வம் காட்டும் உதயநிதி எதற்காக மன்சூர் அலிகானை ஓரம் கட்டினார் என்பது தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.