Tamilnadu

சிக்கிய பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் அடச்சை அப்படியே பிளேட்டை மாற்றி விளக்கம் கொடுத்த பரிதாபம் !

niranjankumar
niranjankumar

தமிழகத்தை சேர்ந்த  தனியார் ஊடகத்தில் டெல்லியின் செய்திகளை தொகுத்து வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருபவர் நிரஞ்சன், பெரும்பாலான உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள், மத்திய அரசு நடவடிக்கைகள் என டெல்லியை மையப்படுத்தி அரசியல் எதிர்பார்ப்பு எழுந்த நேரத்தில் நிரஞ்சன் தனியார் தொலைக்காட்சியான புதிய தலைமுறையில் தகவல்களை சேகரித்து வழங்குவார்.


இந்நிலையில் இவர் இருவேறு நேரங்களில் இருவேறு சம்பவங்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தற்போது விவாத பொருளை கிளைப்பியதுடன் அவரின் உண்மை முகத்தை வெளி உலகிற்கு காட்டியுள்ளது இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையணை தமிழக காவல்துறை என்கவுண்டர் செய்தது.

இந்த சம்பவம் வரவேற்பை பெற்றது இதனை வாழ்த்தி பதிவிட்ட நிரஞ்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் காஞ்சிபுரத்தில் துப்பாக்கி காட்டி கொள்ளையில் ஈடுப்பட்ட வடமாநில கொள்ளையன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

டெல்லி,உபி,பீகார் போலீஸ்ன்னு நினைச்சுட்டாய்ங்க தமிழ்நாடு போலீஸ, ஆயிரம் விமர்சனம் இருக்கலாம்,ஆனா இதுல எல்லாம் கில்லி இப்போ எடுக்கிற நடவடிக்கையில இனி ஒரு பய வரக்கூடாது என பதிவிட்டு இருந்தார் உண்மை தான் என பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர் இந்த சூழலில்தான் நிரஞ்சனின் இரட்டை முகம் வெளிவந்தது, இதே போன்று உத்திர பிரதேசத்தில் என்கவுண்டர் சம்பவம் ஒன்று நடந்த போது இதே நிரஞ்சன் என்ன கூறினார் என பாஜகவினர் பகிர்ந்துள்ளனர்.

அதில் 8 போலீசை சுட்டு கொன்ற ரவுடி விகாஷ் தூபே மற்றும் அவனது கும்பலை கடந்த 2நாட்களில் சுட்டுக்கொன்றது உத்தரபிரதேஷ் போலீஸ்  கேங்ஸ்டருக்கும், காவல்துறைக்கும் என்ன வித்தியாசம்இருக்கு! நீதிமன்றத்தை அருங்காட்சியகமாவும் சட்ட புத்தகத்தைஅலமாரியுலும் வைத்து மூடிவிடலாம் என பதிவிட்டுள்ளார்.

அதாவது நீதிமன்றம், சட்டம் இருக்கையில் உத்திர பிரதேச காவல்துறை எப்படி சட்டத்தை கையில் எடுக்கலாம் ரவுடிக்கும் போலீசுக்கும் என்ன வித்தியாசம் என கேட்டுள்ளார், திமுக ஆட்சியில் போலீஸ் செய்தது சரி என பாராட்டியவர், பாஜக ஆட்சியில் போலீஸ் செய்த போது  சட்டம் நீதிமன்றம் எதற்கு என கேட்டுள்ளார்.

இந்த இரு பதிவுகளையும் ஒன்றாக ஒப்பிட்டு  பாஜகவினர் நிரஞ்சனை கலாய்த்து வருகின்றனர், என்னமா கூவுறாரு பாரு என்பன உட்பட பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன இந்த சூழலில் தன் பதிவு குறித்து நிரஞ்சன் விளக்கம் கொடுத்துள்ளார் அதில் விகாஷ்துபே ஒரு கேங்ஸ்டர்,பல ஆண்டாய் தேடப்பட்டு வந்தவன்.8காவல்துறையினரை கொலை செய்த பின்.,

நிலைமை கைமீறவே அவனை கைது செய்து தங்கள் வாகனத்திலேயே அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் சுட்டுக்கொன்றது உபிபோலீஸ்,அதை தான் எல்லாரும் விமர்சித்தார்கள்இதை எப்படி ஒப்பிடுறாங்க என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஏன் நீதிமன்றம் சட்ட புத்தகம் எதற்கு என நிரஞ்சன் உத்திர பிரதேச போலீஸ் என்கவுண்டர் செய்த போது கேட்டது ஏன் என எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என நெட்டிசன்கள் மீண்டும் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர், எப்படி பிளேட்டை மாற்ற வேண்டும் என நிரஞ்சனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.