Cinema

வாக்குவாதமான விவாதம் "சக்க போடு" போட்ட இசையமைப்பாளர் கங்கை அமரன்!

gangai amran interview
gangai amran interview

இசையமைப்பாளர் கங்கை அமரன் தனியார் யூடுப் சேனல் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்து இருந்தார் பேட்டி என்று சொல்வதை காட்டிலும் மனதில் பட்டதை எப்படி பேச முடியுமோ அப்படியே பேசிவிட்டார் என்றே சொல்லவேண்டும், முதல் கேள்வியாக நெறியாளர் இளையராஜா மோடி மற்றும் அம்பேத்கரை ஒப்பிட்டு உரை எழுதிய கேள்வியை கேட்டார்.


அதில் பாஜகவினர் மற்றும் நீங்கள்தான் இளையராஜாவிற்கு உரை எழுதி கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பேச படுகிறதே என கேட்க வெளுத்து எடுத்து விட்டார், ஓ 15 புத்தகங்கள் எழுதியவருக்கு நான் முன்னுரை எழுதுகிறேன் என சொல்கிறார்களா?  அவர் இசையமைத்த பாடல் நான் எழுதியது என சொல்வார்களா? என்ன ஒரு மடை தனமான கேள்வி என கேள்வி எழுப்பியவரை வெளுத்து எடுத்துவிட்டார்.

அப்படியே நான் அம்பேத்கர் மோடியை ஒப்பிட்டு எழுதினால் என்ன தப்பு என்கிறாய், ஒருவர் அம்பேத்கர் கைகளால் அம்பேத்கர் பெரும் விருது என திருமாவளவன் மற்றும் ஸ்டாலினை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசினார்களே அது சரியா? அந்த ஒப்பீடிற்கு என்ன பதில் சொல்கிறாய் சொல்லு என ஆக்ரோஷமாக  பதில் கொடுத்தார் கங்கை அமரன்.

அதாவது அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்றுதான் நேர்காணல் அழைப்பின் போதே கங்கை அமரன் கூறினாராம் ஆனால் எடுத்த எடுப்பில் முதல் கேள்வியாக கங்கை அமரனிடம் கேள்வி எழுப்பியவர், இளையராஜா முன்னுரை எழுதியது குறித்து கேட்க ஆக்ரோஷமாக கடிந்த வார்த்தைகளில் பதில் கொடுத்துள்ளார் கங்கை அமரன்.

கங்கை அமரன் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக கேள்வி எழுப்பினார் ஏன் திருமாவளவன், ஸ்டாலின் இருவரையும் அம்பேத்கருடன் ஒப்பிட்டது சரி என்றால் மோடியை ஒப்பிட்டது என்ன தவறு என நேரடியாக கூறிவிட்டார் இந்த விவாதம் மீண்டும் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

விவாதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.