
இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏவின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ தெளிவாகக் கூறியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால் தற்போது உலக வல்லரசான அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மறைமுகமாக உதவி வருகிறது. இந்தியாவை தனது கட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்பும் அமெரிக்கா இந்தியாவை சுற்றியுளா சிறிய நாடுகளை கைக்குள் போட்டுகொண்டு இந்தியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் தர முயன்று வருகிறது.
இதற்கிடையில் அமெரிக்காவின் சிஐஏவில் 15 ஆண்டுகள் பணியாற்றிய ஜான் கிரியாகோ, பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவராக இருந்தவர். சமீபத்தில் அளித்த நேர்காணலில் அவர் கூறியதாவது பாகிஸ்தான் எத்தனை முறை இந்தியாவுடன் மோதினாலும், அது வெற்றி பெறாது. இந்தியா இன்று உலகின் நான்காவது மிகப்பெரிய இராணுவ சக்தி. தொழில்நுட்பம், நுண்ணறிவு திறன், பொருளாதார வலிமை அனைத்திலும் இந்தியா பாகிஸ்தானை பல மடங்கு தாண்டி நிற்கிறது. எனவே இந்தியாவைத் தூண்டுவது பாகிஸ்தானுக்கே ஆபத்தான முடிவு,”
அவர் மேலும் கூறுகையில், “பாகிஸ்தான் தன் அணு ஆயுதங்களால் இந்தியாவை மிரட்ட முடியும் என நினைக்கிறது. ஆனால் இந்தியா அச்சப்படாது. இந்தியா ஒவ்வொரு முறை பயங்கரவாதத் தாக்குதலுக்கு உடனே தக்க பதில் கொடுத்துள்ளது. 2016-ம் ஆண்டு நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், 2019-ம் ஆண்டு பாலகோட் தாக்குதல், சமீபத்திய ஆப்ரேஷன் சிந்தூர் ஆகியவை இதற்குச் சிறந்த உதாரணங்கள். இந்தியா இன்று தன்னம்பிக்கையுடன், தன் மக்களை பாதுகாக்கும் வல்லமை கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது,”
அமெரிக்கா 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோது, 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோதும், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக நேரடி யுத்தம் நடத்தும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் இந்தியா அமைதி காத்தது எனவும் ஜான் கிரியாகோ குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் ஆட்சிக்காலத்தில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளது அதற்கு கைமாறாக பாகிஸ்தானின் அணு ஆயுதக் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது பாகிஸ்தான்
மேலும் ஜான் கிரியாகோ மேலும் கூறுகையில், “இன்று சவூதி அரேபியா சீனாவுடனும் இந்தியாவுடனும் நல்லுறவை மேம்படுத்துகிறது. உலக அரசியல் மாறிவருகிறது. இதில் இந்தியா ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது. உலக நாடுகள் இந்தியாவின் வலிமையை மதிக்கின்றன. இந்தியா எந்த ஒரு பிரச்சனையையும் சமாதானமாகச் சீர்செய்யும் திறன் கொண்ட நாடு,” என்றார்.
2007-ம் ஆண்டு அமெரிக்காவின் சித்திரவதை திட்டங்களை வெளிப்படையாக உறுதிப்படுத்திய முதல் சிஐஏ அதிகாரி என்பதோடு, அந்த காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்ட முதல் அதிகாரியாகவும் பெயர் பெற்றவர் ஜான் கிரியாகோ. அவர் வெளிப்படையாக கூறியுள்ள இந்த கருத்துகள், பாகிஸ்தான் மட்டும் அமெரிக்காவின் உண்மையான நிலையை உலகம் முன் வெளிப்படுத்துகின்றன.
இன்றைய இந்தியா ஒரு சக்திவாய்ந்த ஜனநாயகம். ராணுவ வலிமை, பொருளாதார வளர்ச்சி, நவீன தொழில்நுட்பம், உலக அளவிலான மரியாதை — இவைகளின் இணைப்பால் இந்தியா “வெற்றி பாதையில் நடந்து வருகிறது. இதன் எதிரே நின்று யாரேனும் சவால் விடுக்கும் போது, அவர்கள் தங்களின் முடிவை திரும்பப்பெறுவேண்டும் என்பதே ஜான் கிரியாகோவின் எச்சரிக்கை. அவரின் வார்த்தைகள் ஒரு உண்மை: இந்தியா அமைதி விரும்பும் நாடு; தன்மானத்தை சீண்டினால் அதற்கு தக்க பதிலடியை கொடுக்கும் வல்லமை தற்போது இந்தியாவிடம் உள்ளது.
