
பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் விவாதமாக இருந்து வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் பிகாரைச் சேர்ந்த நித்தின் நபினை கட்சி தனது தேசிய செயல் தலைவராக அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு, பாஜகவில் தலைமுறை மாற்றத்துக்கு கட்சி தயாராகி விட்டதற்கான வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
1980-ஆம் ஆண்டு பாஜக உருவான அதே ஆண்டில், பிகார் தலைநகர் பாட்னாவில் பிறந்தவர் நிதின் நபின். அவரது தந்தை நவீன் கிஷோர் பிரசாத் பிகாரில் பாஜக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவர். சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார். நிதின் நபின் இளம் வயதிலேயே சங்க பரிவார அமைப்புகளோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார், பாஜகவின் இளைஞர் அமைப்பான பாரதிய யுவமோர்ச்சாவில் தீவிரமாக செயல்பட்டவர். தந்தையின் மறைவுக்குப் பிறகு, பாஜக அவரை நேரடி தேர்தல் அரசியலுக்குள் கொண்டு வந்தது.
2006-ஆம் ஆண்டு, தனது 26-ஆவது வயதில் மேற்கு பாட்னா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நித்தின் நபின், பின்னர் பாங்கிப்பூர் தொகுதிக்கு மாறினார். அதன்பிறகு இதுவரை அவர் தோல்வியை சந்திக்காமல் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.பிகாரில் இளைஞர் அமைப்பை வலுப்படுத்திய அவரது செயல்பாடுகள் காரணமாக, தேசிய அளவில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார். தற்போது நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அமைச்சராகவும் இருந்து வருகிறார்.
45 வயதான நிதின் நபின், பீகார் மாநில அரசியலில் குறிப்பிடத்தக்க முகமாக இருந்து வருகிறார். பாஜக அமைப்புப் பணிகளில் நீண்ட அனுபவம் கொண்டவராகக் கருதப்படும் நிதின் நபின், கட்சியின் அடித்தள அமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயஸ்தா சமூகத்தைச் சேர்ந்த அவர், சமூக சேவையிலும் ஆர்வம் கொண்டவராக அவர் அறியப்படுகிறார்.அவரது தேர்தல் அரசியல் பயணம் 2006-ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் பாட்னா மேற்கு தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக முதன்முறையாக வெற்றி பெற்றார். பின்னர், பாங்கிபூர் தொகுதியிலிருந்து
2020 சட்டமன்றத் தேர்தலில், நடிகர்–அரசியல்வாதியான சத்ருகன் சின்ஹாவின் மகன் லவ் சின்ஹாவை தோற்கடித்து நிதின் நபின் கவனம் பெற்றார். சமீபத்திய தேர்தலிலும், 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பீகாரில் தனது அரசியல் பிடியை உறுதிப்படுத்தினார். நிதின் நபின் அடித்தளத் தொண்டர்களுடன் நெருக்கமானவர், மத்திய தலைமைக்கு நம்பிக்கைக்குரியவர் எனப் பார்க்கப்படுகிறார். குறிப்பாக அமித்ஸாவின் வலது கரமாக இருந்து செயல்பட்டு வருகிறார். பீகாரில் கட்சியின் அமைப்பு பணிகள், தேர்தல் மேலாண்மை, தொண்டர் வலையமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தனது முழுக் காலத்தையும் நிறைவு செய்துள்ள நிலையில், கட்சியின் உச்ச அமைப்பில் மாற்றங்கள் நடைபெற்று வரும் சூழலில், நிதின் நபினின் இந்த நியமனம் முக்கிய அரசியல் சிக்னலாகக் கருதப்படுகிறது. தேசிய பணிநிர்வாகத் தலைவர் என்ற முறையில், மத்திய தலைமையையும் மாநிலக் கட்சிகளையும் இணைக்கும் பாலமாக அவர் செயல்படுவார் என்றும், நாடு முழுவதும் பாஜக அரசியல்–தேர்தல் உத்திகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
