
டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கியது.
அதில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல. அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது. சோதனை அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதைபோல சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சென்னையில் தேனாம்பேட்டை, தி.நகர், அண்ணா சாலை, பெசன்ட் நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் இதில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் ஜாமீனில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விரைவில் விசாரணை மேற்கொள்ள தயாராகி வருகிறது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி சிறையிலிருந்தபோது, மதுவிலக்குத்துறை முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டிருந்தது. டாஸ்மாக் நிர்வாகத்தை கவனித்த அனுபவம் அவருக்கு ஏற்கெனவே உண்டு என்பதால், முத்துசாமியிடமே கூடுதல் பொறுப்பாக அந்தத் துறையை கொடுக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கிடையே தான் தான் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை சப்ளை செய்யும் சிவா டிஸ்டிலரீஸ் நிறுவனம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் ஈண்டும் அமலாக்கத்துறை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில், டாஸ்மாக்கிற்கு மதுபான சப்ளை செய்ததில் பல ஆயிரம் கோடி வரை அந்நிறுவனம் முறைகேடு செய்திருப்பதற்கான ஆவணங்களை கைப்பற்றியது. இது தமிழக அரசு தலையில் இடியை இறங்கியுள்ளது மேலும் சப்ளை நிறுவனம் அப்ப்ரூவர் ஆகவும் தயாராகி உள்ளார்களாம்.
டாஸ்மாக் விவகாரத்த்தில் முக்கிய போனை கைப்பற்றி உள்ளது அமலாக்கத்துறை இதில் ஐந்து டாக்குமென்ட்டுகள் சிக்கியிருக்கின்றனவாம். சில மதுபான ஆலைப் பிரமுகர்களுடன் அவர் பகிர்ந்த தகவல்களையும் தோண்டியெடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. விரைவிலேயே, அந்தமூத்த அதிகாரியிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டிருக்கும் அமலாக்கத்துறை, அவருடைய போனிலிருந்து எடுக்கப்பட்ட அனைத்து முக்கிய ஆவணங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கத்தயாராகி உள்ளது.
ஏற்கனவே ஜாமினில் இருக்கும்முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை 6 மாதத்தில் முடிக்க சொல்லி நீதிமன்றம் கூறியுள்ளது. அவர் மீண்டும் சிறைக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ள நிலையில் டாஸ்மாக் வழக்கிலும் செந்தில் பாலாஜிக்கு சம்மன் வழங்கினால் மொத்தமாக முடிந்துவிடும் எனவே வெளியே வரமுடியாத நிலைக்கு செந்தில் பாலாஜி தள்ளப்படுவர் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.இதில் செந்தில் பாலாஜி சிக்கினார் அவரின் அரசியல் வாழ்க்கை குளோஸ் என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்கள்.