Tamilnadu

அதி மேதாவியாக எண்ணி கேள்வி எழுப்பிய கரு.பழனியப்பன் நெத்தியடி வாங்கிய சம்பவம் !!

Karu Palaniappan
Karu Palaniappan

தமிழகத்தில் தாங்கள் கொண்ட கொள்கை தான் சரி என விதண்டாவாதம் செய்யும் ஒரு கூட்டம் உள்ளது அந்த கூட்டத்தில் முன்னணியில் இருப்பவர் கரு.பழனியப்பன் சினிமா துறையில் நடிகர் இயக்குனராக பணியை தொடங்கிய அவர் அங்கு தோல்வியை தழுவிய நிலையில் தற்போது கமெர்சியல் தொலைக்காட்சி ஒன்றில் விவாத தொகுப்பாளர் பணியை செய்கிறார்.


மேலும் நேரம் கிடைக்கும் போது கனிமொழி உள்ளிட்ட அரசியல் வாதிகளுக்கு பிரச்சாரமும் செய்து வருமானம் பெற்று வருகிறார் அந்தவகையில் எப்போதும் இந்து மதம் குறித்து மட்டுமே கேள்விகள் எழுப்பும் வகையில் விவாத நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலைகளில் ஈடுபட்டு வருபவர், நிகழ்ச்சியில் தனது கருத்திற்கு எதிராக வரும் பல கருத்துக்களை வெட்டி ஒட்டி நிகழ்ச்சியை வடியமைத்து வருவதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரே குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது ஐயப்பன் கோவிலுக்குள் ஏன் பெண்களை அனுமதிக்கவில்லை என்ற கேள்விக்கு ஐயப்ப பக்தர் ஒருவர் நெத்தியடி பதில் அளித்தார், இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது, தற்போது ஐயப்ப பக்தர்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து இதுதான் சரியான பதில், அறியாதது போன்று கேள்வி எழுப்பும் கரு பழனியப்பன் போன்ற நபர்களுக்கு காலத்திற்கும் காதில் கேட்கும் வகையில் பதில் அளித்து இருக்கிறார் என நெட்டிசன்கள் காய்ச்சி எடுத்து வருகின்றனர். இனி எப்போதும் கரு பழனியப்பன் இந்த கேள்வியை கேட்கமாட்டார் எனவும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர், வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.