Tamilnadu

நீங்க விவாகரத்து செய்ததுகூட ஓகே ஆனால் கடைசியில் ஏன் அந்த வார்தையை குறிப்பிட்டீர்கள் தனுஷ் நெட்டிசன்கள் கேள்வி !

dhanush and ishwariya
dhanush and ishwariya

சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்யும் நடைமுறை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது சமீபத்தில் சமந்தா - சைதன்யா ஜோடி விவாகரத்து செய்வதாக அறிவித்த சம்பவத்தில் இருந்து பலரும் மீளாத நிலையில் புதிதாக தற்போது தனுஷ் -ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்து செய்வதாக அறிவித்து இருப்பது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.


மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நடிகர் தனுஷ் நேற்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவும் இந்த முடிவை உறுதி செய்துள்ளார். கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், 38, இயக்குனர் கஸ்துாரி ராஜாவின் இளைய மகன். தன் 16 வயதில் நடிக்க வந்தார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, 40, நடிகர் தனுஷை காதலித்து 2004ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக தனுஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து, தனுஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '18 ஆண்டுகளாக நண்பர்களாக, துணையாக, பெற்றோராக வாழ்ந்தோம். தற்போது பிரிய முடிவு எடுத்து உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவு தேவைப்படுகிறது. எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள்'  ஓம் நமசிவாயா என தெரிவித்துள்ளார் தனுஷ்.


தனுஷின் விவாகரத்து அறிவிப்பை ஐஸ்வர்யாவும் உறுதி செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர். இந்த சூழலில் விவாகரத்து என்பது சினிமா துறையினருக்கு ஒன்றும் புதிதல்ல ஆனால் விவாகரத்து என வெளியிட்ட அறிக்கையில் ஏன் ஓம் நமசிவாயா என குறிப்பிட வேண்டும். நல்லதற்கு குறிப்பிட்டால் பரவாயில்லை கெட்டதற்கு ஏன் குறிப்பிட வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இனி தமிழக ஊடகங்களும், யூடுப் தளங்களும் இதுவரை விவகாரத்து செய்த சினிமா பிரபலங்கள் யார் யார் என பட்டியல் போடுவார்கள் அதை நினைத்தால் தான்.. கவலையாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.