
வரும் காலங்களில் தமிழகத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை மிக தீவிரமாக நடைபெறவுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.இதற்கு காரணம் அமலாக்கத்துறையின் ஈகோவை டச் செய்துள்ளது திமுக. உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என அமலாக்கத்துறைக்கு எதிராக காய்களை நகர்த்தியது அந்த துறையை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. மேலும் உதயநிதியின் நண்பரை காப்பாற்ற டெல்லியில் ஒரு டீமே முகாமிட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் ரெய்டில் , இந்த அளவுக்கான அழுத்தத்தை இதுவரை அதிகாரிகள் எதிர்கொண்டதில்லையாம். ‘பையன் ரொம்ப நல்லவர்’ என தமிழக உயர் அதிகாரிகள் தரப்பிலிருந்தே சிபாரிசுகள் பறக்கின்றனவாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் என முக்கிய அதிகாரிகளும்கூட வாலிபரைக் காப்பாற்ற வியூகங்கள் வகுக்கிறார்களாம். ஆளும் வாரிசுக்குக்கூட இவ்வளவு லாபி வேலைகள் நடக்கவில்லையாம்.இந்த இளம் தொழிலதிபர் ரத்தீஷைகாப்பாற்ற, அங்கே இங்கே எனத் தொடங்கிய லாபி வேலைகள், கடைசியில் டெல்லியின் பவர்ஃபுல் அலுவலகம் வரை நீண்டதாம். ‘ஓர் இளைஞரை நெருக்கடி வளையத்திலிருந்து மீட்க இவ்வளவு பெரிய கூட்டமா?’ என அமலாக்கத்துறையின் அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளார்களாம். ககுறிப்பாக பல பிரபலங்கள் இந்த இளம் பையனுடன் தொடர்பில் இருக்கிறார்களாம் அவர்கள் குறித்து தகவல்களை திரட்டி வருகிறார்கள். மேலும் தமிழக சினிமாத்துறையில் பல விக்கெட்டுகள் விழலாம் என்பதால் தான் இவ்வளவு லாபி வேலைகளை செய்து வருகிறது வாரிசு தரப்பு. மோடி ஈடி என வாய்க்கிழிய பேசிவிட்டு ஏன் டெல்லியில் லாபி செய்யவேண்டும் என அவர்களை துரத்திவிட்டுள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் இன்றைக்கு உச்சமான இடத்திலிருக்கும் துப்பாக்கி வாங்கிய நாயகன் , ரெய்டு விவகாரத்தில் வசமாக சிக்க வாய்ப்புள்ளதாம். தேர்தல் நேரத்தில் மொழி பிரச்சனை குறித்த படத்தை வெளியிட முடிவு செய்திருந்தது வாரிசு தரப்பு. இதை சரியாக பயன்படுத்தி கொண்ட வருத்தப்படாத நாயகன் படத்தில் ஹீரோவாக கமிட்டாகும் போதே ஷேர் குறித்து பேசி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராணுவ வீரர் கெட்டப் போட்டு வெற்றி அடைந்த அந்த நாயகர். வீரமரணம் அடைந்த அந்த ராணுவ வீரரின் நினைவு நாளுக்கு கூட அஞ்சலி செலுத்தவில்லை. இதற்கிடையில் ‘வருத்தப்படாத’ நாயகனுக்கு எதிரான ஆதாரங்கள் பல சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ‘சந்தர்ப்பம் வாய்க்கும்போது, ‘வருத்தப்படாத’ நாயகனை எப்படியாவது சாய்த்துவிடுவார்கள் தரப்பில்!
இது ஒருபுறம் இருந்தால் ஜாபர் சாதிக் விஷயமும் தற்போது சூடு பிடித்துள்ளது. ஏனென்றால் போதை பொருள் விற்ற பணத்தில் தான் படம் தயாரித்துள்ளார் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர். டாஸ்மாக் பணம், மணல் கொள்ளை, போதை பொருள் விற்ற பணம்,கனிமவள ஊழல் பணம். மின்சார துறையில் சம்பாதித்த பணம் என அனைத்து ஊழல் பணமும் சினிமா துறையில் விளையாடி உள்ளது. நடிகர் நடிகைகள் மக்களின் வரிப்பணத்தில் சொர்க்கத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கிடையில் சினிமா நட்சத்திரங்களை அமலாக்கத்துறை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருந்தால் திமுகவைச் சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்களும், 5 திமுக எம்பிகளும் விரைவில் ரெய்டில் சிக்குவார்கள் என்கிறது டெல்லி வட்டாரம். இதற்கென தனி டீமை இறக்க உள்ளதாம் டெல்லி. மேலும் அமைச்சர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருக்க ஆதரங்களை முன்கூட்டியே திரட்டி வருகிறதாம். இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் தன் மகனை காப்பாற்ற மோடியுடன் நடந்த சமரச முயற்சி தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது
முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு, முதல்வர் மனைவி துர்காஸ்டாலின் பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன் எண்பதாவது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தது. மு க ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதற்கு முன்பு மத்திய நிதி அமைச்சரை கனிமொழி நேரில் சென்று சந்தித்தது. இப்படி திமுகவின் முதல் குடும்பம் அடுத்தடுத்து பாஜகவின் மூத்த தலைவர்களை சந்தித்து வருவது, அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. குறிப்பாக திமுகவே தானாக வந்து பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தால் தேவையில்லை என்கிற மனநிலையில் தான் பாஜக உள்ளது. அந்த வகையில் விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமலாக்க துறை மூலம் கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகிறது.