24 special

நீங்க வீதிக்கு வந்தீங்க அவங்க திட்டம் வெற்றி.., "இளையராஜாவை" மீண்டும் சீண்டிய திருமாவளவன்...!

thirumavalan and ilayaraja
thirumavalan and ilayaraja

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார், அப்போது இஸ்லாமியர்களை பாஜக உள்ளிட்ட அமைப்புகள் தூண்டி விடுவதாகவும்,நீங்கள் வீதியில் இறங்கி போராடினால் பாஜக வெற்றி பெற்றுவிடும் எனவே அமைதி காக்க வேண்டும் என திருமாவளவன் அறிவுரை வழங்கி இருக்கிறார் அத்துடன் இசைஞானி இளையராஜாவை நினைத்து பரிதாப படுவதாக குறிப்பிட்டுள்ளார்.


இஸ்லாமியர்கள் அமைதி காக்க வேண்டும். இஸ்லாமியர்கள் ஆத்திரப்பட்டு விடக்கூடாது, வீதிக்கு வந்து விடக்கூடாது. எதிர்வினை என்ற பெயரில் அவர்கள் விரும்பும் இருதுருவ அணி புரட்சிக்கு வழி வகுக்கக் கூடாது. இஸ்லாமியர் அல்லாத சில ஜனநாயக சக்திகள் இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

சங்பரிவார் கும்பலை எதிர்ப்பவர்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாக சித்தரிக்கிறார்கள். இதை எப்படி கையாள்வது என காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளுக்கே அச்சம் இருக்கிறது. சங்பரிவார் கும்பலின் உண்மையான அரசியலை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் கடமையாக உள்ளது.

சமூகத்தில் யார் மக்களோடு நெருக்கமாக இருக்கிறார்களோ, அவர்களை சந்திப்பது தான் அவர்கள் நோக்கம். ஆர்எஸ்எஸ் காரர்கள் அப்படி இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன். அம்பேத்கர் மோடி சிந்தனையாளர்கள் செயல்பாட்டாளர்களும் என்ற புத்தகத்தை கொடுத்து அணிந்துரை கேட்டிருக்கிறார்கள். அவரும் இரண்டு பக்கம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என இசைஞானி சொல்லியிருக்கிறார்.மோடியை எப்படி அவர் விமர்சித்து இருப்பார் என சொல்ல முடியாது. அவரால் மோடியை சகித்திருக்க முடியாது. அவர் இருந்திருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. அவர் இன்னும் 5 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால், இந்தியாவின் தலையெழுத்தே மாறியிருக்கும்; திசை வழியே மாறியிருக்கும்.

அவர் மறைந்த பிறகு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.சனாதன கும்பலின் முதல் எதிரி அம்பேத்கர். ஆர்.எஸ்.எஸ் யின் அரசியலை இறுதி மூச்சுவரை மூர்க்கமாக எதிர்த்தார் அம்பேத்கர்ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் 13 ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.இசைஞானி இளையராஜா போன்றவர்களை குறி வைப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். இளையராஜா பாவம் என்று இரக்கம் காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டை குறிவைத்து விட்டார்கள். இஸ்லாமிய வெறுப்பை தீவிரப்படுத்துகிறார்கள். கிருத்துவ எதிர்ப்பையும் கையில் எடுக்கிறார்கள்.விடுதலை சிறுத்தைகளை சீண்டினால் கவனம் கிடைக்கும் என நினைக்கிறார்கள். பாஜகவா? விடுதலை சிறுத்தைகளா? என்ற அரசியலை எடுக்க எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை. இது சமூக நீதி மண், இங்கு காலூன்ற அனுமதிக்கக் கூடாது என்ற கவலை தான் இருக்கிறது.

விரைவில் இதற்கு தீர்வு உண்டாக்க வேண்டும் என பேசியுள்ளார் திருமாவளவன் மொத்தத்தில் தொடர்ச்சியாக இசைஞானியின் நிலையை விமர்சனம் செய்துவரும் திருமாவளவன், மோடி சிறந்த பிரதமர் என பாராட்டிய கருணாநிதியை விமர்சனம் செய்வாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர் இளையராஜா தரப்பினர்.

இவர் என்ன இளையராஜா மீது இரக்கம் காட்ட பரிதாப பட, முதல்வர் ஆவேன் என அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திருமாவளவன் ஒரு சீட் ரெண்டு சீட்டிற்கு கையேந்தி நிற்கும் நிலையை பார்த்து உலகமே சிரித்து வருவதாக திருமாவளவனுக்கு பதிலடி கிடைத்து வருகிறது.