Cinema

என்ன "கெளதம்" மேனன் இது... நாயகிகள் பாவம் இல்லையா? என்ன சார் இதெல்லாம்...!

Trisha ,Gowtham menon
Trisha ,Gowtham menon

கெளதம் மேனன் திரைப்படத்தில் கதா நாயகிகள் அனைவரையும் வில்லன்கள் எந்த நேரத்தில் கடத்து கிறார்கள், மேலும்  நாயகர்களும் கதையில் என்ன செய்கிறார்கள் என்பதை விஸ்வக் சேனன் என்பவர் பட்டியல் போட அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது, அதானே என்ன கெளதம் மேனன் இது ஒரு நாயகியையும் முதல் இரவிற்கு முன்னர் விட்டு வைப்பது இல்லையா எனவும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.


விஸ்வக் சேனன் குறிப்பிட்ட பதிவு பின்வருமாறு, கல்யாணத்தன்றே நாயகியை தூக்குவது கௌதம் மேனனின் வில்லன்களுக்கு பிடித்த சிக்னேச்சர் பொழுதுபோக்கு. காக்க காக்கவில் சாந்தி முகூர்த்தம் முடிந்ததும் நாயகியை தூக்கிவிடுவார்கள். 

வெந்து தணிந்த காட்டில் கொஞ்சம் முன்னதாகவே ஸ்பாட்டுக்கு வந்துவிட்டதால் சாந்தி முகூர்த்தம் நடப்பதற்கு முன்னரே தூக்கிவிகிடுறார்கள். என்னை அறிந்தாலில் கல்யாணத்திற்கு முந்தைய நாள் தூக்கிவிடுவார்கள். த்ரிஷாவை பிடிக்காது போல, அதனால் இன்னும் ஒருபடி மேலே சென்று போட்டு தள்ளிவிடுவார்கள். 

வேட்டையாடு விளையாடுவில் கல்யாணம் பேச்சு ஆரம்பித்ததுமே நாயகியை தூக்கிவிடுவார்கள். அதில் இன்னொரு நாயகியை ஹனிமூன் போய் வந்ததும் போட்டு தள்ளிவிடுவார்கள் என்பது உபதகவல். 

இப்படி ஜோடிகளை சேரவிடாமல் பிரிப்பதில் விஜய் டிவி சீரியல் வில்லிகள் போல் ஒரு கௌதம் மேனனின் வில்லன்கள் ஒரு தனி ப்ரீட். கௌதமின் வில்லன்கள்தான் இப்படி என்றில்லை, அவரது ஹீரோக்களும் இதை செய்வதுண்டு. 

மின்னலேவில் நாயகன் இன்னொருவருக்கு நிச்சயமான நாயகியை தூக்கிவிடுவார்.  நடுநிசி நாய்களில் நாயகன் பக்கத்து வீட்டு ஆண்டியை தூக்கிவிடுவார். 

ஹீரோக்கள்தான் இப்படி என்றால் ஹீரோயின்களும் இதில் போட்டிக்கு வருகிறார்கள்.  நீதானே என் பொன் வசந்தத்தில், இன்னொரு பெண்ணை மணக்க இருக்கும் நாயகனை, கல்யாணத்திற்கு முந்தைய இரவில் நாயகி தூக்கிவிடுகிறார். 

விண்ணை தாண்டி வருவாயாவில் இப்படி தூக்குவதற்கு யாருமே இல்லாததால் நாயகி தன்னை தானே தூக்கிகொள்கிறார். கடைசியில் வின்னர் வடிவேலு வாக்கியம் போல யாரு தூக்கினா என்னா? மொத்தத்தில அந்த ஜோடி நாசமா போனா சரிதான், என்பதே எங்கள் அன்பு டைரக்டரின் விருப்பம் என கிண்டலாக பதிவு செய்துள்ளார் விஸ்வக்சேனன்.