
மதுரையில் திமுக நடத்திய பொதுக்குழுவுக்குப் போட்டியாக மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை மதுரையில் பாஜக ஜூன் 8-ல் பிரமாண்டமாக நடத்தியது இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். திமுக பொதுக்குழுவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் எந்த ‘ஷா’ வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே அவுட் ஆப் கன்ட்ரோல் தான். என எப்போதும் போல் வீர வசனம் பேசி கைத்தட்டலை வாங்கிவிட்டு அமலாக்கத்துறை ரெய்டு நடந்த போது டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் டெல்லியில் இருக்கும் வேளையில் இங்கு உதயநிதி மோடியாவது ஈடியாவது என பேசி வம்பை விலைக்கு வாங்கினார்
இந்த நிலையில் தான் தி.மு.க-வுக்கு எதிரான காய்நகர்த்தல்களையும் வேகப்படுத்தத் தீர்மானித்திருக்கிறார் அமித் ஷா. “இனி ஒவ்வொரு மாதம் அமித் ஷா தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அமித் ஷா தமிழகம் வரும்போதும், தி.மு.க-வுக்கு எதிராக ஒவ்வொரு அரசியல் குண்டாக வெடிக்கும் என்கிறார்கள். கண்டிப்பாக முக்கிய புள்ளியின் கைது இருக்கும் என என டெல்லி வட்டாரங்கள் கூறுகிறது.
கட்சி நிகழ்வில் கலந்துகொள்ள மதுரை வந்த உள்துறை அமைச்சர் பேசியபோது டெல்லியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைத்திருக்கிறோம். அதேபோல, மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். ஊழல், ஊழல் என தி.மு.க அரசாங்கம் ஊழலில் ஊறிப்போயிருக்கிறது. மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களையும் நிதியையும் தி.மு.க அரசாங்கம் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதில்லை. டாஸ்மாக்கில் 35,755 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார்கள்.என திமுகவை வெளுத்து வாங்கிவிட்டார்.
மேலும் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி என்பதை ஏற்கெனவே விளக்கமாகச் சொல்லிவிட்டார் அமித் ஷா. அதில், எந்தக் குழப்பமும் இல்லை. முதல்வரின் டெல்லி பயணத்துக்குப் பிறகு, ‘டாஸ்மாக் விவகாரத்தில் மத்திய அரசின் வேகம் குறைந்துவிடும். தி.மு.க மேலிடத்தை இனி கண்டுகொள்ள மாட்டார்கள்’ என தி.மு.க வட்டாரத்தில் செய்திகள் பரவின. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதுபோல, ‘35,000 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருக்கிறது’ எனச் சொல்லிவிட்டார் அமித் ஷா. சொன்னவர், மத்திய உள்துறை அமைச்சர் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். டெல்லி மதுபான ஊழல்போல, டாஸ்மாக் ஊழலையும் பெரும் பூதமாக்க அமித் ஷா முடிவுசெய்துவிட்டார். இனி, தி.மு.க-வுக்குக் குடைச்சல்தான்” என்றார்.
இந்தநிலையில் அமலாக்கத்துறை ரெய்டால் லண்டனுக்குக் கிளம்பிச் சென்ற உதயநிதியின் நெருக்கமான `ரத்தீஷ், வரும் வாரத்தில் தமிழகத்துக்குத் திரும்பவிருக்கிறாராம். பெங்களூரில் பதுங்கியிருந்த ‘விக்ரம் ஜூஜூ’ பிரமுகரும் சென்னைக்குத் திரும்பிவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அச்சத்திலிருக்கும் அவர்களிடம், ‘வாரிசுப் புள்ளியை மேலிடம் பாதுகாத்துக்கொள்ளும். உங்கள் கதிதான் அதோகதி என கூறியுள்ளார்கள். இதனால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் ரத்திஷ் டாஸ்மாக் விவகாரத்தில் அப்ரூவர் ஆகலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது இது அறிவாலய தரப்பிற்கு பெரும் இடியை இறக்கியுள்ளது.
இதற்கிடையே தான் உதயநிதியின் வீடியோ காட்டு தீயாக வைரலாகி வருகிறது. சென்னையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித் ஷா மதுரையில் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பினார் உதயநிதி. குறிப்பாக எந்த ஷா வந்தாலும் அவுட் ஆப் கண்ட்ரோல், ஈடியாவது மோடியாவது என பேசிய உதயநிதி பதிலளிக்காமல் ஓடிய வீடியோ தற்போது இணையத்தால் காட்டுத்தீயாக வைரலாகி வருகிறது.