24 special

திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்த பாட்டியின் வீடியோ! திமுகவினரின் மொத்த லட்சணம் வெளிவந்தது... காத்திருந்த முதல்வருக்கு ஷாக்..

MKSTALIN,MLAMAHARAJAN
MKSTALIN,MLAMAHARAJAN

 திமுகவினருக்கு அடித்தட்டு மக்கள் என்றால் ஏதோ அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் நினைத்து விட்டார்கள் அவர்கள் எஜமானர் போல நடந்து வருகிறார்கள். அடித்தட்டு மக்களின் ஓட்டுக்களை வாங்கி கொண்டு அவர்களை ஏளனமாக பேசுவது திமுகவுக்கு வழக்கமாகி விட்டது. ஓராண்டுக்கு முன்பு அப்போதைய அமைச்சராக இருந்த பொன்முடி, மக்கள் வரிபணத்தை வாங்கிக்கொண்டு அதில் இலவச பேருந்தை செயல்படுத்தி விட்டு  இலவச பயணம் திட்டம் தொடர்பாக பெண்களை ஓசி என பேசினார் அதாவது பெண்கள் ஓசியில் பயணம் செய்வதாக கூறினார் இதற்கு  கடுமையான கண்டனங்கள் எழுந்தன. 


தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்து வந்தது. இதற்கிடையே  தற்போது  பொன்முடி பாணியில் திமுக ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் இலவசபயணத் திட்டம் குறித்து சலசலப்பை ஏற்படும் விதத்தில் பேசியிருக்கிறார் ஓசி பஸ்ஸில் சென்று விடுங்கள். உங்கள் கணவன்மார்கள் வீட்டில் சமையல் செய்யட்டும் என நக்கலாக பேசியது கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? என பாஜக மாநில முன்னாள் அண்ணாமலை கேள்வி கேட்டுள்ளார் 

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து வரும் வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அமைத்து வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர்.இந்த கடைகளை திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் 3 பேர் குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும் கடைக்குத் தகுந்தார் போல் ரூபாய் 100 முதல் 200 வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது.இதே போல செவ்வாய்க்கிழமை கடைகள் அமைத்து வியாபாரம் நடைபெற்று வந்த போது வயதான மூதாட்டி ஒருவர் சிறிய தட்டுகளில் மிளகாய் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

அங்கு வந்த குத்தகைதாரரும் ஆனைமலை திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகி சந்தோஷ்குமார் என்பவர் இங்கெல்லாம் கடை போடக்கூடாது என அந்த மூதாட்டி இடம் ஓசியில கடை போடுவியா? என பணம் கேட்டு வாக்குவாதம் செய்து தகாத வார்த்தையால் திட்டி கடையை எடுக்குமாறும் மேலும் மிளகாய் வைக்கப்பட்டிருந்த தட்டுகளை தூக்கி எரிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார். செய்வதறியாத அந்த மூதாட்டி அழுது புலம்பியுள்ளார். இதை பார்த்த அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறதுதெருவோர வியாபாரி முறைப்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் சட்டம் மாநில அரசின் விதிகளின் கீழ் என்ன பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்