24 special

ஒரே பேட்டியில் அசத்திய அண்ணாமலை...!

Sailendrababu,  annamalai
Sailendrababu, annamalai

தனியார் யூடுப் சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் அண்ணாமலை கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அதில் காவல்துறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கும் கஞ்சாவை கட்டுப்படுத்துவது எப்படி சாத்தியம் என அண்ணாமலை தெரிவித்த கருத்து காவல்துறையினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.


ஒரு கற்பனைக்காக கேட்கிறேன்  உங்களை சென்னை கமிஷனராக நியமித்தால் கஞ்சா விற்பனையை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்  பேசு தமிழா பேசு யூ டியூப் ஞானவேல் கேட்க அதற்கு அண்ணாமலை, அண்ணா காவல்துறை பணி என்பது நினைத்தவர் எல்லாம் ஆக முடியாது அதற்கு இறைவனின் கொடுப்பினை வேண்டும் அப்படிபட்ட வேலையில் உள்ளவரை..,

தமிழக அரசியல் வாதிகள் ஏதோ வீட்டு வேலை ஆள் போல் நடத்துகிறார்கள் தற்போது காவல்துறையின் மிக முக்கிய பணியே டிராபிக்கை ஒழுங்குபடுத்துவது மட்டும் தான், காவல்துறையை நவீனபடுத்துனம் அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கனும் 

சட்டம் ஒழுங்கை சரி பண்ணனும் என்றால் கஞ்சா விற்பவன் விபச்சாரம் செய்பவன் கேங் ரேப் பண்ணுபவன் இவனுகளை பிடிச்சு சாத்து சாத்துனு சாத்தனும் இவனுகளிடம் எல்லாம் மனித உரிமை எல்லாம் பார்க்க கூடாது, அதோடு முக்கியம் காவல்துறையில் உள்ளவர்களுக்கு விசாரனையின் போது ஒரு பிரச்சனை என்றால் தைரியம் கொடுக்கனும் அதைவிட்டு அரசே  மாட்டி விடக்கூடாது என அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, அண்ணாமலை பேட்டி கீழே இணைக்கப்பட்டுள்ளது,