
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி படாதபாடுகளைபட்டு வருகிறார். கடந்த வருடம் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த மாநாட்டின் பெயரே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஏனென்றால் சனாதனத்தை எதிர்க்க கூடாது ஒழிக்கத்தான் வேண்டும் நமக்கு பெரும் தொற்று ஏற்படுத்தக்கூடிய மலேரியா டெங்கு கொரோனா போன்றவற்றை நாம் அழிக்கத்தான் நினைப்போம் அதேபோன்று தான் சனாதனமும் அளிக்க வேண்டிய ஒன்று அதனை எதிர்க்கக் கூடாது என உதயநிதி பேசியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு உதயநிதிக்கு எதிரான கண்டனங்களும் குவிந்தது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் இருந்து சனாதனத்தை இழிவாக பேசியதிற்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டது மற்றும் பல காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடிக்க சனாதனத்தை குறித்து சிறிது காலம் பேசாமல் இருந்தார் அமைச்சர் உதயநிதி! இருப்பினும் இவரது இந்த பேச்சு திமுக தேசிய அளவில் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் INDI கூட்டணியில் இருந்தும் எதிர்ப்புகள் பெற்றது.
அதை முதல்வர் ஸ்டாலின் எப்படியோ சமாளித்து தனது கூட்டணியை தக்க வைத்துக் கொண்டார் இருப்பினும் உதயநிதியின் இந்த சனாதன எதிர்ப்பு பேச்சு INDI கூட்டணிக்கு பெருத்த தோல்வியை ஏற்படுத்தியது. அதாவது ஐந்து மாநிலங்களின் தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றது INDI கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவை சுட்டிக்காட்டியது. INDI கூட்டணிகளிடையே சச்சரவுகளை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனையால் INDI கூட்டணி கூடுவதாக கூறியிருந்த நான்காவது மாநாட்டை நடத்த முடியாமலும் போனது! அதாவது நம் தோல்விக்கு காரணமாக இருந்த திமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுங்கள் என்று INDI கூட்டணியின் முக்கிய கட்சி தலைமைகள் தெரிவித்ததாகவும் அதற்காகவே இந்த மாநாட்டை அவர்கள் புறக்கணித்ததாகவும் டெல்லி வட்டாரங்களில் கிசு கிசுக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் மழை பாதிப்பு ஏற்பட்டிருக்கும்போது கூட்டணியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தன் மகன் பேசியவற்றிற்கு மன்னிப்பு கேட்கும் வகையிலும் மாநாட்டிற்கு ஓடோடி சென்றது பெரும் விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் ராமர் கோவிலைப்பற்றி பேசுவதில் உதயநிதி பின்வாங்கி உள்ளார். அதாவது அயோத்தியில் ராமர் கோவில் அமைவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை நாங்கள் எந்த மதத்திற்கும் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் அல்ல என்று கூறியுள்ளார். ஏற்கனவே சனாதன தர்மத்தை குறித்து பேசி பல சரிவுகளை கண்ட விவகாரத்தால் அயோத்தி கோவில் விவகாரத்தில் எந்த ஒரு முரண்பாடான கருத்துக்களையும் கூறாமல் பின்வாங்கி விட்டார்! ராமர் எந்த கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார் என அவரது தாத்தா கேட்டார், ஆனால் தற்பொழுது ராமரை குறித்து பேசினால் இருக்கும் கூட்டணியும் போய்விடும் என்பதற்காக திமுக ராமரை குறித்து பேச பயப்படுகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து சில அரசியல் விமர்சகர்களிடம் கேட்டபோது ராமர் கோவில் விவகாரத்தை பற்றி அதிகம் பேசிவிடக்கூடாது எனவும் குடும்பத்தில் இருந்து கூறப்பட்டதாகவும் வேறு சில தகவல்களை கசியவிடுகின்றனர். ஏற்கனவே பேசியதெல்லாம் போதும் இனி தேர்தல் வரை பேசாமல் இருக்கவேண்டும் எனவும் உதயநிதிக்கு முதல்வர் குடும்பத்தில் உள்ள முக்கியமான நபர் கூறியதாகவும் வேறு சில தகவல்களை கசியவிடுகின்றனர்.