24 special

இது தான் இந்தியா பவர்! வாயை பிளந்த அமெரிக்கா! பதுங்கு குழியை அழிக்கும் பங்கர் பஸ்டர்

PMMODI,SHAHBAZSHARIF
PMMODI,SHAHBAZSHARIF

கடந்த ஜூன் மாதம் ஈரானில் உள்ள அணு ஆயுத உள்கட்டமைப்புகளைக் குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது உலகளவில் மிகப்பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது இதற்கு காரணம் இந்த தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்தியிருக்கும் பங்கர் பஸ்டர்தான். பெயரிலிருந்தே இந்த குண்டுகள் வலிமை புரிந்து கொள்ளலாம். இந்த குண்டுகள்  பூமியைக் குடைந்துசென்று தாக்கும் என்பது வல்லமை கொண்டதாகும். 


குறிப்பாக அமெரிக்கா ஈரானின் அணுசக்தி வளாகமான, போர்டோ மீது , 'பங்கர் பஸ்டர்' வெடிகுண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அதை விட அதிகமான வெடிகுண்டுகளை சுமக்கும் பங்கர் பஸ்டர் ஏவுகணைகளை உள்நாட்டில் தயாரிக்க இந்தியா முடிவு செய்துஅதற்கான பணிகளை துவங்கிவிட்டது. 

உலக நாடுகளிடையே சமீபத்தில் நடந்த மோதல்களில்  வான்வழி தாக்குதல்கள் தான் பெரிதாக பேசப்பட்டது குறிப்பாக ட்ரோன் மூலம் தாக்குதல் தான் முன்னணியில் இருந்து வருகிறது. இதற்கிடையில் அமெரிக்காவின் தாக்கல் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதில்  இருந்து ஒரு விஷயத்தை புரிந்து கொண்ட நம் நாடு, எதிர் கால போர்களுக்கு தயாராகும் வகையில், வலுவூட்டப்பட்ட நிலத்தடி இலக்குகளில் ஊடுருவக்கூடிய சக்தி வாய்ந்த புதிய ஏவுகணை அமைப்பை உருவாக்கும் பணியை துரிதப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தான் அக்னி - 5 பங்கர் பஸ்டர் ஏவுகணையை  தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.  , 2,500 கி.மீ., துாரம் வரை  7,500 கிலோ கிராம் எடையுள்ள வெடிகுண்டுகளை சுமந்துச் செல்லும் திறனுடையது. வலுவூட்டப்பட்ட கான்கிரீட் அடுக்குகளுக்கு அடியில் புதைந்துள்ள எதிரி நாடுகளின் அணுசக்தி வளாகங்களை தாக்கும் வகையில், இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட உள்ளது. வெடிப்பதற்கு முன், 260 - 330 அடி வரை நிலத்தடியில் ஊடுருவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் அணுசக்தி நிலையங்களை தகர்க்க, பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை பயன்படுத்தி அமெரிக்கா வலிமையை காட்டிய நிலையில், அதற்கு சவாலாகவும், அதை விட மேம்பட்டதாகவும் பங்கர் பஸ்டர் ஏவுகணையை உருவாக்க இந்தியா முடிவெடுத்து , அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை சுமந்துச் செல்ல, விலை உயர்ந்த குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. ஆனால் நம் நாடோ, குறைந்த செலவில் தரையில் இருந்து ஏவும் வகையில் வடிவமைத்து வருகிறது.

அக்னி - 5 பங்கர் பஸ்டர் ஏவுகணை, இரு வகைகளில் உருவாகிறது. ஒன்று, தரைக்கு மேலே உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும்; மற்றொன்று, கடினமான நிலத்தடி உட்கட்டமைப்பில் துளையிடும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஏவுகணையும் 8 டன் வரை எடையுள்ளதாக இருக்கும். இது உலகளவில் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும்.கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி- 5 உடன் ஒப்பிடும் போது, புதிய வகை ஏவுகணை செல்லும் துாரம் குறைவாக இருந்தாலும், வெடிகுண்டுகளின் எடை மிக அதிகமாக இருக்கும்.

பாகிஸ்தான் சீனா போன்ற எதிரி நாடுகளில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ஏவுகணை குழிகள் மற்றும் முக்கியமான ராணுவ உட்கட்டமைப்புகளை குறிவைப்பதற்கு, இந்த பங்கர் பஸ்டர் ஏவுகணை முக்கியமானதாக இருக்கும்.அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் வெடிகுண்டு அமைப்பு போல தோன்றினாலும், அதை விட இந்த ஏவுகணை மிகவும் மேம்பட்டது. இந்த வகை ஏவுகணையை உள்நாட்டிலேயே உருவாக்கி பயன்படுத்துவதற்கான நம் நாட்டின் உந்துதல், வளர்ந்து வரும் ராணுவ திறன்களையும், பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் தன்னம்பிக்கைக்கான உறுதிப்பாட்டையும் காட்டுகிறது.