24 special

"அண்ணாமலைக்கு" இலங்கை தமிழர் கொடுத்த பரிசின் பின்னால் உள்ள ஆச்சர்யம்..!

Annamalai
Annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம் அரசியலில் பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டு அங்குள்ள இலங்கை தமிழர்கள் இடையே பல்வேறு அரசியல் கட்சிகளை சந்தித்து தமிழ் தலைவர்களை ஒற்றுமை படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.


நேற்றைய தினம் இலங்கை சிறையில் உள்ள இந்திய தமிழ் மீனவர்களை சந்தித்து அவர்களை விரைவில் வெளியுறவுத்துறை மூலம் வெளியில் கொண்டுவருவோம் என ஆறுதல் தெரிவித்தார், தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு அரசியல்வாதி இலங்கை சிறையில் சென்று தமிழக மீனவர்களை சந்தித்து பேசுவது இதுவே முதல்முறை.

இப்படி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அண்ணாமலை இன்று முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார், இப்படி இலங்கையில் பல்வேறு அதிரடி அரசியலை முன்னெடுத்துவரும் அண்ணாமலையை இளைஞர் ஒருவர் சந்தித்து பரிசு ஒன்றை கொடுத்தார்.

அது குறித்து சுந்தரராஜ சோழன் குறிப்பிட்டதாவது, விஜயனின் வருகைக்கு முன்பே, அங்கே ஸ்தாபிக்கப்பட்ட 'பஞ்ச ஈஸ்வர' தலங்களை அடையாளப்படுத்தி,அதில் பாஜக தலைவர் அண்ணாமலை படத்தையும் வரைந்து,மரத்தாலான  கலைப்பொருளை பரிசாக கொடுத்துள்ளார் திரு. Vinoth Balachandran..

இந்தப் பரிசு மிக மிக அற்புதமானது..அது நமது பல்லாயிரமாண்டு ஒத்த கலாச்சார உறவை செம்மை செய்வதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை இலங்கை பயணம் மூலம் ஒட்டுமொத்த தமிழக தலைவராக உருமாறும் வாய்ப்புகள் நெருங்கி வருவதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.