Tamilnadu

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் காப்பாற்றப்பட்ட பெண் குழந்தை அந்த பெண்ணுடயது இல்லையாம் மேலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் !

select news
select news

வெள்ளத்தில் தத்தளித்த பெண் மற்றும் அவரது கையில் வைத்திருந்த பெண் குழந்தையை இளைஞர்கள் தைரியமாக நீந்தி சென்று காப்பாற்றிய சம்பவம், நாடு முழுவதும் பாராட்டை பெற்றுவரும் வேலையில் இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.வெள்ளத்தில் சிக்கிய பெண் கையில் வைத்து இருந்தது அவரது குழந்தையாக இருக்கலாம் என பலரும் எண்ணிய வேலையில் அந்த குழந்தை தன்னுடைய அண்ணன் மகன் என்று விளக்கம் கொடுத்துள்ளார் பெண், அங்கு என்ன நடந்தது என்ற முழுமையான  விளக்கத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் குழந்தையுடன் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார். காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, பெரும் பாறைகள் கொண்ட இடத்தில் சிக்கிக்கொண்ட அந்த தாயையும் குழந்தையையும் மீட்க இளைஞர்கள் சிலர் முயற்சி செய்தனர். குழந்தையையும், தாயையும் பாதுகாப்பாக மீட்டு அழைத்து வரும்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் இருவர் பிடிமானம் இல்லாமல் வெள்ளநீரில் விழுந்தனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் போராடி நீந்தி கரை சேர்ந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.இந்நிலையில், வெள்ளத்தில் மீட்கப்பட்ட இளம்பெண் செய்தித்தளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், “கொரோனாவால் 2 ஆண்டுகளாக எங்கும் செல்லாத நிலையில் ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சிக்கு சென்றோம்.எனது அண்ணனின் 8 மாதக் கைக்குழந்தை சுஜினாஸ்ரீயை நான் வைத்திருந்தேன். குழந்தை அழுததால் தண்ணிரில் இருந்த மீன்களைக் காட்டிக்கொண்டே சென்றேன். திடீரென நீரின் மட்டம் அதிகமானது.

ஒருகட்டத்தில் நான் நின்றிருந்த பாறை தண்ணீரில் மூழ்கியதால் நான் மேலே ஏற முயன்றேன். ஆனால் அதிகமாக வழுக்கியதால் என்னால் கரைப் பக்கம் செல்ல முடியவில்லை. வேறு வழியின்றி அருகே இருந்த பாறை மீது கஷ்டப்பட்டு ஏறிப் பிடித்துக்கொண்டேன்.என் அண்ணன் வருவதற்குள் யாரோ இரண்டு பேர் வெள்ளத்தில் குதித்து என்னையும், குழந்தையையும் மீட்டு மேலே அனுப்பினார்கள். நாங்கள் பாதுகாப்பாக மேலே ஏறியதுமே எங்களை காப்பாற்றிய இருவர் வெள்ளநீரில் தவறி விழுந்துவிட்டனர்.

அவர்கள் மீண்டும் பாதுகாப்பாக நீந்தி வந்ததும்தான் நாங்கள் நிம்மதியடைந்தோம். அவர்கள்  லட்சுமணன் மற்றும் ரகுமான் என பின்னர் அறிந்துகொண்டோம். யாரென்றே தெரியாத எங்களுக்காக உயிரைப் பணயம் வைத்த அவர்கள்தான் கடவுள்.” என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். அண்ணன் குழந்தையை காப்பாற்ற அத்தையாக இளம்பெண் போராடியதும்.யார் என்றே தெரியாத இரு உயிர்களை காப்பாற்ற இருவர் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி மீட்டதும் என பல்வேறு திருப்பங்களும் தகவல்களும் வெளியாகி நெகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளன.