24 special

பெண்களையே சொக்க வைத்த ரகசியம்...!சமயவிளக்கு பூஜையில் ஸ்வாரசியம்..!

KERALA TEMPLE
KERALA TEMPLE

கேரள மாநிலம் கொல்லம் அருகே கொட்டங்குளக்கரா ஸ்ரீ தேவி கோவிலில் சமயவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. கலர்ஃபுல் மேக்கப்புடன் இல்லத்தரசிகளுக்கும் இளம்பெண்களுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் ஆண்கள் பெண் வேடம் அணிந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.பெண்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில், பெண் வேடமிட்டு வந்து சமயவிளக்கு திருவிழாவில் கலந்து கொண்ட ஆண்களின் காட்சிகள் நம் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்துகிறது. அப்படி ஒரு அழகு ஆண் தேவதைகளாய் ஜொலித்தனர்.தமிழ் திரைப்படங்களில் பெண் வேடமிட்ட ஹீரோக்களின் நடிப்பை கண்டு களித்த நமக்கு, கடவுளின் தேசத்து ஆண்கள் சற்று வித்தியாசமான தோற்றத்தில் விருந்து அளித்துள்ளனர்...கேரள மாநிலம் கொல்லம் அருகே கொட்டங்குளக்கரா ஸ்ரீ தேவி கோவிலில் வனதுர்கை ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் வனதுர்கை அம்மன் கோவிலில் 2 நாட்களுக்கு சமய விளக்கு திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சமய விளக்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பெண் வேடமிட்ட ஆண்கள், ஐந்து முக குத்துவிளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வனதுர்கை அம்மனை வழிபட்டனர். 


இவ்வாறு வழிபட்டால் வேலை கிடைக்காத ஆண்களுக்கு வேலையும், திருமணமாகாத ஆண்களுக்கு திருமணமும் நடைபெறும் என்பது வனதுர்கை அம்மனின் பக்தர்களின் நம்பிக்கையாகும்.இத்திருவிழாவில், சமய விளக்கு திருவிழாவில் நூறுக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டு பெண்களாக வலம் வந்தனர்.சிகை மற்றும் முக அலங்காரம் செய்து அச்சு அசலாக பெண்ணாக மாறி வந்த ஆண்களின் அழகு தேகத்தை பார்த்து இளம்பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளே பொறாமை கொண்டனர்...அந்த அளவுக்கு மிக தத்ரூபமாக பெண் வேடமிட்டு ஆண்கள் வந்ததால் சக ஆண்களே அழகில் மயங்கி போனார்கள் என்றே சொல்லலாம்.குறிப்பாக பெண் வேடமிட்டு வந்த ஒவ்வொரு ஆண்களின் பாடி லாங்வேஜும் பெண்களை போலவே இருந்ததால் எது ரியல், எது ரீல் என்று தெரியாமல் திருவிழாவுக்கு வந்தவர்கள் திணறி போனார்கள்...மொத்தத்தில் சேட்டன்களின் சேட்டையால் சக சேட்டன்கள் ஜொள்ளு விட, சேச்சிகளோ நமக்கே டஃப் கொடுக்கிறார்களே என மண்டை காய்ந்து போனார்கள்..