24 special

சற்றுமுன் வெளியானது அடுத்த ஆப்பு வெளியான போட்டோ துருக்கிக்கு இந்தியா வைத்த ஆப்பு துடிதுடிக்கும் துருக்கி

PMMODI,NIKOSCHRISTODOULIDES
PMMODI,NIKOSCHRISTODOULIDES

ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரம் அடைந்து கொண்டு இருக்கும் நிலையில், பிரதமர் மோடி சத்தமின்றி ஜி 7 மாநாட்டிற்கு முன்பாக செய்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ உடன் இணைந்து பிரதமர் மோடி நிகோசியா அருகே உள்ள மலைப் பகுதிகளை பார்வையிட்டார். இந்த பகுதியில் புகைப்படம் எடுத்து அவர் இணையத்திலும் வெளியிட்டார். இப்பகுதி 1974 முதல் துருக்கியின் ஆக்கிரமிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். சைப்ரஸ், துருக்கியுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஒரு மத்திய கிழக்கு நாடாகும்.


இப்படிப்பட்ட நிலையில்தான் துருக்கிக்கு பெரிய மெசேஜ் கொடுக்கும் விதமாக மோடி சத்தமின்றி இந்த சம்பவத்தை செய்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளின் விவகாரங்களில் தலையிடும் துருக்கிக்கு பதிலடி தரும் விதமாக துருக்கி ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளின் முன் புகைப்படம் எடுத்து.. அந்த பகுதிகள் பற்றி சைப்ரஸ் நாட்டுடன் ஆலோசனை செய்து மோடி அதிரடி காட்டி உள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கு  பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் சைப்ரஸுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். பிரதமர் மோடியை சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ வரவேற்றார். மேலும், நாட்டின் உயரிய சிவிலியன் விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மக்காரியோஸ் III விருதை வழங்கி கௌரவித்தார். இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களும் நிகோசியா அருகே உள்ள மலைகளைப் பார்வையிட்டனர். இப்பகுதி 1974 முதல் துருக்கியின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

சைப்ரஸ் மற்றும் துருக்கி இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும் பிராந்திய மற்றும் அரசியல் மோதல்களே இதற்குக் காரணம். 1974ஆம் ஆண்டு நடந்த ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து துருக்கி இந்த தீவை ஆக்கிரமித்தது சைப்ரஸ் மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளும் மத்திய தரைக்கடல் பகுதியில் எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் உரிமைகள் தொடர்பாக தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான சைப்ரஸுக்கும் துருக்கிக்கும் இடையே இதனால் மோதல் உச்சம் அடைந்து உள்ளது.

இதற்கிடையே துருக்கி பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆயுத உதவி செய்ததோடு அரசியல் ரீதியாகவும் ஆதரவு அளித்தது.அதே துருக்கி  சைப்ரஸ் நாட்டுடன்  எல்லைப் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளது.துருக்கி ஒரு பக்கம் இந்தியாவை எதிர்க்கும் நிலையில்.. காஷ்மீர், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் போன்ற இந்தியாவின் நிலைப்பாட்டை சைப்ரஸ் தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இதன் மூலம் துருக்கிக்கு செக் வைக்க முடியும் அதேபோல் சைப்ரஸ் நெருக்கமானால் ஐரோப்பாவிற்கும் நெருக்கமாக முடியும்.என்பது இந்தியாவின் ராஜா தந்திரம். ஏற்கனவே துருக்கி மீது பல தடைகளை விதித்துள்ளது இதனால் ஏற்கனவே ஆடிப்போயுள்ளது துருக்கி இந்த நிலையில்தான்  துருக்கி ஆக்கிரமித்த  மலைப்பகுதியில் இருந்து மோடி  போட்டோ எடுத்தது உலக அரசியலில் பேசு பொருளாகி உள்ளது. 

சைப்ரஸ் 2026 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் சுழற்சித் தலைவர் பதவியை வகிக்க உள்ளது. பிரதமரின் இந்த பயணம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பை ஆழமாக்க உதவும். பிரதமரின் மூன்று நாடுகளுக்கான பயணத்தின் கடைசி கட்டமாக குரோஷியாவுக்குச் செல்கிறார். அங்கு அவர் அதிபர் ஜோரான் மிலானோவிச் மற்றும் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் ஆகியோரைச் சந்திக்கிறார்.23 வருடங்களுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.