24 special

துருவி துருவி தேடிய வருமானவரித்துறை...! அதிர்ச்சியில் ஜெகத்ரட்சகன்..?

mk stalin
mk stalin

வருமான வரித்துறை சோதனை என்ன யார் வந்தாலும் சமாளிக்க தெரியும் நாங்கள் கலைஞரின் வழி வந்தவர்கள் என எந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாரோ தற்போது வரை செந்தில் பாலாஜி, பொன்முடி என நீண்ட பட்டியல் தற்போது திமுகவின் கருவூலம் என அழைக்கப்படும் ஜெகத்ரட்சகனை நோக்கி திருப்பி இருக்கிறது.இரண்டாவது நாளாக இன்றும் ஜெகத்ரட்சனின் சென்னை அடையாறு வீடு, பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரி, சேலையூர் பாரத் மருத்துவ கல்லூரி, கொளப்பாக்கம் பாலாஜி பாலிடெக்னிக், மாமல்லபுரத்தில் உள்ள கால்டன் சமுத்ரா நட்சத்திர விடுதி, அண்ணா நகர் பரணி பில்டர்ஸ், புதுச்சேரி அகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ லெட்சுமி நாராயணா கல்லூரி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உதவியுடன் நடைபெற்று வருகிறது.


ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுவது மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் என்றும் எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை பார்த்து பாஜக அரசு பயப்படுகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.இந்தநிலையில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அடையாறு பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகனின் இல்லத்தில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பட்டாபிராம் பகுதியில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லூரி பணியாளர் ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதி, பள்ளிக்கரணையில் உள்ள பாலாஜி பல் மருத்துவமனை ஆகியவற்றிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் வீட்டில் ரகசிய அறை உள்ளதா என வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை மேற்கொள்ள வந்திருந்த அதிகாரிகள் வீட்டிற்குள் செல்லாமல் வீட்டின் பின்புறம் இருந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.அங்கிருந்த சுவர்களை தட்டிப் பார்த்தும் ஆய்வுகளை செய்தனர். ஏதேனும் ரகசிய அறைகள் இருக்கிறதா, அங்கு ஏதேனும் ஆவணங்கள் பதுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தெல்லாம் ஆய்வு மேற்கொண்டனர். போலவே அவரின் விலையுயர்ந்த கார்களிலும் சோதனை செய்யப்பட்டது.இதற்கிடையே ஆவணங்களுடன் பெண்ணொருவர் வெளியேறியதை கண்ட அதிகாரிகள், அவரையும் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். தற்போதைக்கு கைப்பற்றப்பட்ட பணத்தை மெஷின் மூலம் எண்ணும் பணிகளும் நடந்துவருகின்றன.கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டிருந்த அமலாக்கத்துறையினர் அவரது ரூ. 89 கோடி மதிப்பிலான சொத்துக்களை அப்போது முடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இச்சோதனையை வருமான வரித்துறை நடத்தி வருகிறது.தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் வருமான வரித்துறை சோதனை என்பது செந்தில் பாலாஜி தொடங்கி பல்வேறு முக்கிய நபர்களின் மூலமாக இருக்கும் சின்டிகேட்டை கண்டு பிடிக்க நடத்த படுவதாக பலரும் கூறிய நிலையில் அது வருமான வரித்துறைக்கு கிடைத்து இருப்பதாகவும் அதனை மூலமாக கொண்டே தற்போது ஜெகத்ரட்சகன் வீட்டில் துருவி துருவி வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.