Cinema

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க... கதறும் திமுகவினர்... நாட்டாமை போட்ட போடு அப்படி!

Sarathkumar and annamalai
Sarathkumar and annamalai

நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக இரண்டையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர்,


“தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை என்பது பெரிய அளவில் ஏதுமில்லை. பாஜக மதத்தை வைத்து அரசியல் நடத்துவதாக கூறப்பட்டாலும், பிற மதத்தவரை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பாஜகவினர் மீது கட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இனிவரும் காலங்களில் அனைவரும் சமம் என்ற சமத்துவம் சூழ்நிலையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்.பாஜக தலைவர் அண்ணாமலை பிரதான எதிர்க்கட்சியாகத்தான் செயல்பட்டு வருகிறார். அவரது கருத்துக்கு பதில் சொல்ல வேண்டியது ஆளுங்கட்சியினரின் கடமை. எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கருத்துகளை முன்வைக்காத நிலையில் பாஜக முன்வைப்பது தவறில்லை.

சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்தவரையில் தொய்வடையவில்லை. தேர்தலில் போட்டியிடுவதால் தங்கள் கையில் இருக்கும் பணத்தையும் இழக்க நேரிடும் என்பதால் கட்சி நிர்வாகிகள் தயங்குகின்றனர்.

இருப்பினும் எங்கள் கட்சியினர் மக்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.ஜனநாயக அரசியல் தற்போதைய சூழ்நிலை இல்லாமல் உள்ளது. கோடி கோடியாக தேர்தலில் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், சராசரி குடிமகன் அரசியலுக்கு வர முடியாத நிலை உருவாகியுள்ளது” என்று அவர் கூறினார்.

பிரதான எதிர்க்கட்சியாக அண்ணாமலை செயல்படுகிறார் என சரத்குமார் சொன்னது, அதிமுகவை கடுமையாக அதிர்ச்சியடைய செய்துள்ளதாம் போதத குறைக்கு எங்களுக்கு எப்போதும் எதிர்க்கட்சி என்றால் அது அதிமுகதான் என செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவினர் சொல்லி வருகின்றனர், அவர்களுக்கும் சரத்குமாரின் கருத்து அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லு என பலரும் சரத்குமாரின் கருத்தை விமர்சனம் செய்து வருகின்றனர், அதே நேரத்தில் சரத்குமார் உண்மையை தானே சொல்லி இருக்கிறார் என பலரும் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.