24 special

3 அமைச்சர்களுக்கு ட்வீஸ்ட் கொடுத்த தமிழக பாஜக......முதலமைச்சர் ஸ்டாலின் அபேஸ்!

annamalai
annamalai

திமுக அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களது கருத்தையும் அனுமதிக்க கோரி தமிழ்நாடு பாஜக திடீரென உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்: திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அதே திமுக ஆட்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆகியோரது ஊழல் வழக்கு விசாரணையில் தமிழக பாஜக சார்பாக கேவியட்  மனு தாக்கல் செய்து திமுகவிற்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.


இந்த மூன்று அமைச்சர்களையும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவித்ததை எதிர்த்து, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யவில்லை. திமுக அமைச்சர்களுக்கு எதிரான இந்த சொத்துக் குவிப்பு வழக்குகள் கையாளப்பட்ட விதம் சந்தேகத்திற்கு இடமாக இருப்பதால், உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகள் தொடர்பான சீராய்வு மனு விசாரணையை தாமாக முன்வந்து தொடங்கியுள்ளார். இந்த வழக்குகள் கையாளப்பட்ட விதமும், தமிழக அரசின் விசாரணை அமைப்புகளின் போக்கும் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் நீதியரசர் கவலை தெரிவித்திருந்தார்.

அமைச்சர் பொன்முடி ஊழல் வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரியும், இடைக்காலத் தடை கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு உச்சநீதிமன்றம் நாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, திமுக அமைச்சர்களுக்கு எதிரான இந்த ஊழல் சொத்துக் குவிப்பு வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, இந்த வழக்குகளில் தமிழக பாஜகவின் கருத்துக்களை உச்சநீதி மன்றம் அனுமதிக்கவேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகார பலத்தில் தமிழக அரசின் விசாரணை அமைப்புகளை முடக்கி, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து எளிதில் தப்பித்துவிடலாம் என்ற திமுகவின் எண்ணம் நிறைவேறாது. திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சருக்கும் எதிராக சட்டப் போராட்டம் நடத்தி, அவர்களுக்கு சட்டரீதியான தண்டனை கிடைப்பதை தமிழக பாஜக நிச்சயம் உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.இதனை வைத்து பார்க்கும்போது திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் சிக்கி கிடத்திட்ட 10முறைக்கு மேல் ஜாமின் கோரி தொடர்ந்த மனுக்கள் எல்லாம் தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.

செந்திபாலாஜி தற்போது வரை புழல் சிறையில் உள்ளார்.அவர்களை தொடர்ந்து திமுகவின் அடுத்து முக்கிய புள்ளி இந்த மூன்று அமைச்சராக்கள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கபடுகிறது. திமுக எம்பி ஆ. ராசா, கனிமொழி 2ஜி வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது மற்றும் ஜெகத்ரட்ச்கன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியதில் 1000 கோடிக்கு மேல் சிக்கியதாக வருமான வரித்துறை தெரிவித்தது இப்படி தொடர்ந்து திமுக அமைச்சர் சிக்கி வரும் நிலையில் பாஜக பழைய வழக்குகளை கையில் எடுத்துள்ளது திமுக முக்கிய புள்ளிகளை கலக்கத்தில் தள்ளியுள்ளது.