24 special

ஐயா சாமி பரஸ்பர உறவையே விரும்புகிறோம்! மண்டியிட்ட வங்கதேசம்! பறந்து வந்த கடிதம்! மொத்த கதையும் ஓவர்!

Pmmodi
Pmmodi



ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா. அண்டை நாடுகளின் ஆதரவு என்பது ஒரே மாதிரியாக இருப்பதில்லை மதம் சார்ந்து அண்டை நாடுகள் முடிவெடுக்கிறார்கள். வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவுடன் நெருங்கிய நட்பை பாராட்டினார். ஆனால், அவரது ஆட்சி கலைந்தபிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, சீனாவுடன் நெருக்கம் காட்டியது. மேலும் வங்க தேசத்தில்  இந்துக்களின் கோவில்கள் சூறையாடப்பட்டது. மத ரீதியாக அங்கு இந்துக்களை கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் இந்தியாவில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை  சிறுபான்மையினர் அனைவரும் பாதுகாப்பாகவே இருந்து வருகிறார்கள்.



பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் கடந்த 1971 ம் ஆண்டு தனி நாடாக பிரிந்தது வங்கதேசத்திற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது இந்தியா தான். பல இந்திய ராணுவ வீரர்கள் உயிர்களை இழந்து வங்கதேசத்திற்கு சுதந்திரம் வாங்கி தந்தார்கள்,‘வங்கதேசமோ தற்போது இஸ்லாமிய தேசமாக உருவாகி உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்துள்ளது. மதத்தால் இந்தியாவிற்கு துரோகம் இழைத்துள்ளது. 


இந்தியாவை எதிர்த்துவிட்டு சீனாவுடன் கைகோர்க்கும் வங்கதேசத்தை லெப்ட்ஹேண்டில் டீல் செய்து வருகிறது. அதேபோல் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறது வங்கதேசம் இருப்பினும் நம் நாடு தொடர்ந்து வங்கதேசத்துக்கு உதவி செய்து வருகிறது.ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரிசி வழங்கி வருகிறது. அதேபோல் மத்திய பட்ஜெட்டில் வங்கதேசத்துக்கு உதவிடும் வகையில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும் கூட வங்கதேசம் இன்னும் திருந்தவில்லை. இப்படியான சூழலில் தான் தற்போது நம் நாட்டின் முன்னணி தொழிலதிபரான அதானியிடம் வங்கதேசம் கெஞ்சியது 


அதானி பவர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் வங்கதேசத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.1,600 மெகாவாட்  வங்கதேசத்துக்கு வழங்கப்பட்டு வந்தது.வங்கதேசத்தில் நடந்த வன்முறை, வர்த்தக பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றால் அந்த நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு என்பது பற்றாக்குறையை நோக்கி சென்றது. இதனால் அதானி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை வங்கதேசத்தால் செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அதானி நிறுவனம் வங்கதேசத்துக்கு வழங்கும் மின்சாரத்தை பாதியாக குறைத்தது. இதனால் வங்கதேசம் அதிக பாதிப்பை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் வங்கதேசம் இந்தியாவுக்கு ஏற்றுமதி  செய்யப்படும் ஆடை பொருட்கள் வருடத்திற்கு 700 மில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என்றும்  தற்போதைய நிலையில், இந்திய அரசு வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்துள்ளதால் வங்கதேசத்தில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.இது போல் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது வங்கதேசம். சீனாவும் கைகழுவ வங்கதேசத்தை கைகழுவ ஆரம்பித்துள்ளது. 


இந்த சூழலில், பக்ரீத் பண்டிகையையொட்டி வங்கதேச மக்களுக்கும், இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஷ்க்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்களை கூறியிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பிய முகமது யூனுஷ், இந்தியாவுடன் பரஸ்பர உறவையே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.


வங்கதேச இடைக்கால அரசு எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது; பரஸ்பர உறவு, மரியாதை மற்றும் புரிதலும் இரண்டு நாடுகளையும் ஒன்றிணைத்து மக்களின் நலனுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.தியாக திருநாளானது, தியாகம், தாராள மனப்பான்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றால் ஒன்றிணைக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற உத்வேகம் அளிக்கிறது, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.பக்ரீத் வாழ்த்துக்களுக்கு நன்றி மட்டும் கூறாமல்  இந்தியாவுடன் பரஸ்பர உறவையே விரும்புவதாக வெள்ளை கொடியை காட்டியுள்ளது வங்கதேசம்.