
இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகிறது. அதில், அறுபடை வீடுகளில் இருந்தும் வேல் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்துக்கள் மத்தியில் பெரிய எழுச்சி ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக, சென்னிமலையில் தொடங்கி, திருப்பரங்குன்றத்தில் மையம் கொண்டு தற்போது மதுரையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு முடிவுரை எழுதப்படுகின்றது என மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. அதேநேரம், அறுபடை வீடுகளின் மாதிரி கோயில் அமைக்க போலீஸார் அனுமதி தர மறுத்துள்ளனர்.
மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பகுத்தறிவு பேசுகிறோம் என கூறி இந்து மதத்தை மட்டும் குறிவைத்து விமர்சனங்கள் வைத்து வருபவர்கள் தான் திமுகவினர்.சமூகநீதி அரசு ஏன் வாய்க்கிழிய பேசும் முதல்வர் ஸ்டாலின் அரசு இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கமாட்டார்.
ஆனால் மற்ற மதங்கள் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பார். இந்த நிலையில் தான் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளார்கள் என குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.
இதனிடையே முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும்வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி இந்துத் முன்னணி சார்பில் வழக்கு தொரடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்தநீதிபதி, "முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் ஏற்கெனவே பல மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
தற்போது அனுமதி மறுப்பது ஏன்? அறுபடை வீடுகளின் மாதிரி அரங்கு அமைத்து வழிபாடு நடத்துவதற்கு அனுமதி மறுக்க போலீஸார் கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.போலீஸார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசியல் சார்புடன் செயல்படக்கூடாது.என கண்டனம் தெரிவித்தது. மனு குறித்து மதுரை மாநகர் காவல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
விசாரணையை 9ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.மீண்டும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது தமிழக காவல்துறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது நீதிமன்றம்.
‘‘முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டு வழிபட ஆகம விதிகள் அனுமதிக்கிறதா?’’ என கேள்வி எழுப்பினார்.ஆதற்கு மனுதாரர் தரப்பில், ‘‘ஆகம விதிகளின்படியே அறுபடை வீடுகளின் மாதிரிகளை அமைத்து வழிபாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.என பதில் அளிக்கப்பட்டது.
‘முருக பக்தர்கள் மாநாட்டில் எவ்வளவு பேர் கலந்துகொள்கின்றனர் என்பது குறித்த விவரங்களை வழங்கினால்தான் போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க முடியும். எனவே மாநாட்டுக்கு அனுமதி கோரிய பிரதான மனு தொடர்பாக போலீஸார் கேட்டுள்ள கேள்விகளுக்கு சரியான விளக்கத்தை மனுதாரர் அளிக்க வேண்டும் எனவும் அதன் அடிப்படையில் போலீஸார் 2 நாட்களில் முடிவெடுத்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் பூஜைகள் செய்யக்கூடாது’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
முருக பக்த்ர்கள் மாநாடு நடத்துவதற்கு திமுக அரசு பல்வேறு தடைகளை போட்டு வருகிறது. குறிப்பாக இந்த மாநாடு தமிழகத்தில் பெரிய திருப்புமுனையாக அமையும்.தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக உள்ளது.
குறிப்பாக, உளவுத் துறை சரியில்லை. போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்துக்களை ஒன்றுப்படுத்துவதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் இந்துக்களுக்கு விரோதமாக பேசுகிறவர்கள் காணாமல் போவார்கள், என இந்துமுன்னணி கூறியுள்ளது.