Cinema

தவறு செய்த திமுக பிரமுகருக்கு முட்டு கொடுக்க வந்தவரை விரட்டியடித்த பாடகி சின்மயி...!

singer chinmayi
singer chinmayi

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள்/குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக "சமூக ஆர்வலர்கள்"  வேதனை தெரிவித்து வருகின்றனர், இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.


மதுரை, திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான வீரணன் என்பவர் ரேடியோ செட் தொழில் செய்து வருகிறார். இவர் வலையங்குளம் பகுதி திமுக கிளை செயலாளராகவும் உள்ளார்.

திருப்பரங்குன்றத்திற்கு அருகே உள்ள ஒரு தம்பதியினருக்கு 16 வயதில் ஒரு மகள் மற்றும் ஒரு இளைய மகன் உள்ளனர். மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 வகுப்பு படித்து வருகிறார்.

இந்த பள்ளி சிறுமியை மிரட்டி வீர்ணன் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் மேலும் யாரிடமும் சொன்னால் வீடியோவை பரப்பி விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார் இந்த சூழலில்தான் விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளிச்சத்திற்கு வர பள்ளி சிறுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகியை கைது செய்தனர், இந்த செய்தியை பகிர்ந்த சின்மயி தமிழகத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பாலியல் வன்கொடுமை நடக்கிறது மிகவும் வருத்தப்பட கூடிய செயல் என குறிப்பிட்டார், இதற்கு அந்த பதிவில் பதிவு செய்த  Meenavaram Pradeepan பாதிக்கப்பட்ட பெண்ணை ஊருக்கே அறிமுகப்படுத்துவதில் Chinmayi க்கு என்னதான் சந்தோஷமோ..? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த சின்மயி Meenavaram Pradeepan   தவறு செய்த  offender photo தானே இருக்கு இங்க. அந்த குழந்தையின் அடையாளம் எங்கயுமே இல்லையே?  எதுக்கு இப்படுஓடி வரீங்க? உங்க உறவினரோ தவறு செய்த நபர் என வெளுத்து எடுத்துவிட்டார்பல ஆண்டுகளாக சின்மயி பாலியல் குற்றங்களுக்கு எதிராக  கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.