Tamilnadu

அரசியலால் அல்ல அக்கா செய்த புண்ணியத்தால் டார் டாராக கிழித்த பேராசிரியர் ஸ்ரீனிவாசன் !

Prof srinivasan
Prof srinivasan

தமிழகத்தில் நேற்றைய தினம் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என பாஜக மாநிலம் முழுவதும் முக்கிய புனித தளங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு தமிழக அரசின் பாரபட்சமான செயலை கண்டித்தனர்.


இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு பேசினார், பேசினார் என்று சொல்வதை காட்டிலும் திமுகவின் முகத்திரையை கிழித்தார் என்றே சொல்லவேண்டும் அந்த அளவு மக்களிடம் கருத்துக்களை கொண்டு சேர்த்தார்.

முகலாயர்கள் படை எடுத்து வந்த போது எதிர்த்து போராடி கோவிலை மீட்ட எங்களால் ஸ்டாலினையும் திமுகவையும் எதிர்த்து போராட முடியாதா?  நிச்சயம் முடியுமம் நீங்கள் அனைத்து நாட்களிலும் கோவிலை திறக்க அனுமதி மறுத்தால் நாங்கள் தடையை மீறி நிச்சயம் கோவிலுக்கு செல்வோம் கைது செய்துகொள் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தடைகள் வந்தன, காவல்துறை முதல்வர் மனைவி துர்கா ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருவதாக கூறி ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தை மாற்ற  கூறினார்கள், துர்கா அக்கா வருவது இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிந்து இருந்தால் இந்த ஆர்ப்பாட்டம் அவர்கள் தலைமையில் நடந்து இருக்கும் அனைத்து நாட்களிலும் கோவிலை திறக்க அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு இருப்பார் என அவர் பேச ஆர்ப்பாட்டத்தில் கைத்தட்டல்களும் விசிலும் பறந்தது.

ஸ்டாலின் அவர்களே நீங்கள் வெற்றி பெற்றது உங்கள் அரசியலால் அல்ல துர்கா அக்கா செய்த புண்ணியத்தால் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்தார், நண்பகல் வெயில் உச்சத்தில் இருந்த நேரத்திலும் பேராசிரியரின் பேச்சு ரசிக்கும் படியாகவும் அதே நேரத்தில் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் அமைந்து இருப்பதாக அக்கட்சியினர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பேசிய முழுமையான வீடியோவை பார்க்க கிளிக்  (நன்றி - தினசேவல்)