Cinema

பொன்னியின் செல்வன் "திரைப்படம்" குறித்த கேள்வி போட்டு தாக்கிய பொன்.மாணிக்கவேல் !

Poniyin selvan
Poniyin selvan

பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து எதார்த்தமாக பேட்டி கண்டவர் கேட்க அதற்கு முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது, தமிழில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.


 பல்வேறு திரை நச்சத்திரங்கள் நடித்து இருப்பதாலும் மிகவும் புகழ்பெற்ற தமிழ் சரித்திர நாவல் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுத்துள்ள படம் என்பதால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது, இந்த சூழலில் இந்த திரைப்படம் குறித்து முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் அவர்களிடம் கேள்வி எழுப்ப பட்டது..,

அதற்கு அவர் கொடுத்த பதிலில் நிச்சயம் தமிழர்கள் வரலாறு திரைப்படங்களாக வரவேண்டும் நமது பிந்தைய சந்ததியினர் புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதை காட்டிலும் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்புகள் அமையும் அதற்காக மணி ரத்தினத்திற்கு நன்றி. தமிழர்கள் வரலாறை தொடர்ச்சியாக எடுக்கக்கவேண்டும் நானே கையெடுத்து கும்பிடுவேன்.

கடந்த 75 ஆண்டுகளில் தமிழர்களின் வரலாறு மாநில மற்றும் மத்திய அரசுகளால் தவிர்க்க பட்டு இருக்கிறது அப்படியே பள்ளி புத்தகங்களில் வந்தால் வெட்டி ஒட்டி வருகிறது, தமிழர்களின் பட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு விடுகிறது என அதிரடியாக பேட்டியி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல்.

வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.