24 special

இனி விளம்பரம் பண்ணுன அவ்ளோதான்...யார் அப்பன் வீட்டு காசு.. நீதிமன்றத்தின் உச்சகட்ட உத்தரவு.. கலங்கிய விளம்பர மாடல்!

MKSTALIN,SUPREMECOURT
MKSTALIN,SUPREMECOURT

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கு இருக்கிறது என்பதை தேட வேண்டியுள்ளது. குறிப்பாக சமூக நீதி அரசு என மார்தட்டி கொள்ளும் விளம்பர மாடல் அரசில் கடந்த மூன்று ஆண்டுகளில் சாதிய வன்முறைகள் 40 விழுக்காடு அதிகரித்திருக்கின்றன. அதாவது, வழக்கமாக ஆண்டுக்கு 1,400 - 1,500 வன்கொடுமை வழக்குகள் பதிவாகும் நிலையில், இப்போது 2,300 - 2,600 வழக்குகள் பதிவாகின்றன.  “தென்மாவட்டங்களிலேயே, அதிகமாகச் சாதிய மோதல்கள் நிகழ்வது திருநெல்வேலியில்தான். சட்டம்-ஒழுங்கும் சீர்கெட்டுப் போய்விட்டது. கடந்த ஏழு மாதங்களில் மட்டுமே 30-க்கும் மேற்பட்ட கொலைகள் நெல்லையில் நிகழ்ந்திருக்கின்றன. இதைத் தடுப்பதற்கு உண்டான உருப்படியான எந்த வேலையையும் பார்க்கவில்லை அரசு. என்கிறார்கள். 


திமுக அரசு  பதவியேற்றத்திலிருந்து ஒரே துறையில் கவனம் செலுத்தி வந்தது என்றால் அது ஒன்று தான் அது தான் விளம்பர செய்தி துறை. என்றே சொல்லலாம். அதை செய்வேன் இதை செய்வேன் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக வெறும் விளம்பரத்தை மட்டுமே செய்து வருகிறது. அனைத்து கட்சிகளும் இந்த திராவிட மாடல் அரசு விளம்பரத்திற்கு எவ்வளவு செலவு செய்தது அதற்கு வெள்ளை அறிக்கை கேட்டும் வருகிறார்கள். 

மாயவலைப்பேச்சு, போட்டோஷூட், விளம்பரத்திற்காக கோடிகோடியாய் செலவு, இவைதான் இந்த ஆட்சியில் நடக்கிறது. அரசு செலவில், தந்தை பெயரை அரசுத் திட்டங்களுக்கு வைப்பது, அதிகமான இடங்களில் கருணாநிதிக்கு சிலை வைத்தது, மகனை துணை முதலமைச்சராக்கியதைத் தவிர வேறு எதையும் அவர்கள் சாதனையாகச் செய்யவில்லை. இப்போது பேருக்காக திட்டத்தை அறிவித்து, அரசுப் பணத்தில் தன் பெயரையே விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். டெண்டரே விடாமல் ரூ.22 கோடிக்கு 2 விளம்பர ஏஜென்சிகளிடம் அரசு விளம்பரம் செய்யக் கொடுத்திருக்கிறது விளம்பர ஸ்டாலின் அரசு.

இதற்கிடையே தமிழக அரசு சார்​பில் ஏற்​கெனவே தொடங்​கப்​பட்​டுள்ள “உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும்  புதி​தாக தொடங்​கப்​பட​வுள்ள ‘நலம் காக்​கும் மருத்​து​வம்’ போன்ற அரசின் திட்​டங்​களில் ‘உயிருடன் வாழும்’ அரசி​யல் தலை​வர்​களின் பெயர்​களை பயன்​படுத்த தடை விதிக்​கக்​கோரி 

அதி​முக எம்​.பி. சி.​வி.சண்​முகம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு பிறப்பித்த உத்தரவு: உச்ச நீதி​மன்ற உத்​தர​வு​களின்​படி அரசு சார்​பில் ஏற்​கெனவே தொடங்​கப்​பட்​டுள்ள திட்​டங்​கள் மற்​றும் புதிதாக தொடங்​கப்​பட​வுள்ள திட்​டங்​களில் தமிழக முதல்​வரின் புகைப்​படத்தை மட்​டும் பயன்​படுத்​திக் கொள்​ளலாம். ஆனால் உயிருடன் வாழும் அரசி​யல் தலை​வர்​களின் பெயர்​களை அரசி்ன் திட்​டங்​களில் பயன்​படுத்​தக் கூடாது.

எனவே தமிழக அரசின் திட்​டங்​களில் இடம்​பெற்​றுள்ள முதல்​வரின் பெயரை நீக்க வேண்​டும். அதே​போல அரசின் திட்​டங்​கள் மற்​றும் அதுதொடர்​பான விளம்​பரங்​களில் இடம்​பெற்​றுள்ள திமுக சித்​தாந்த தலை​வர்​களான கருணாநி​தி, அண்​ணா, பெரி​யார் ஆகியோரது பெயர்​களையோ அல்​லது புகைப்​படங்​களையோ பயன்​படுத்​தக் கூடாது.

அதே​போல அரசி்ன் திட்​டங்​களில் ஆளுங்​கட்​சி​யின் சின்​னம் மற்​றும் கொடியையோ, பெயரையோ பயன்​படுத்​தக் கூடாது. அவ்வாறு பயன்​படுத்​து​வது உச்ச நீதி​மன்ற தீர்ப்​பு​களுக்​கும், தேர்​தல் ஆணைய உத்​தர​வு​களுக்​கும் முரணானது. ஆனால் தமிழக அரசு புதி​தாக தொடங்​க​வுள்ள திட்​டங்​கள் மற்​றும் ஏற்​கெனவே தொடங்கி செயல்​பாட்​டில் உள்ள திட்​டங்​களுக்கு எதி​ராக நாங்​கள் எந்​தவொரு உத்​தர​வை​யும் பிறப்​பிக்​க​வில்​லை. இவ்​வாறு உத்​தர​விட்​டுள்​ளனர்.