Tamilnadu

சாமானியனிடம் பிரதமருக்கு எதிராக கேள்வி எழுப்ப சென்று வாங்கி கட்டிய வடநாட்டு செந்தில் !

senthil
senthil

தமிழகத்தில் செந்தில்  தொடர்ந்து பாஜகவை விமர்சனம் செய்து வருவதிலும் பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் உலகமே அழிந்துவிடும் என்ற அளவிற்கு கதை சொல்வதிலும் முதன்மையாக இருப்பவர் ,நேற்றுகூட சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்ட நபரை பாஜக வேட்பாளர் எனவும் புரளியை கிளப்பியவர்களில் செந்திலும் ஒருவர் , மேலும் நடந்தது இடைத்தேர்தல் என கூட தெரியாமல் பாஜக வேட்பாளருக்கு அவரது குடும்பத்தினரே வாக்கு அளிக்கவில்லை என வீடியோ வெளியிட்டார் .


ஆனால் போட்டியிட்ட கார்த்தி என்பவரது குடும்பத்தினர் இருப்பது 4 வது வார்டு என்பதும் இடை தேர்தல் நடந்தது 9-வது வார்டு என்பதும் அதிமுக சார்பில் வைத்தியலிங்கம் என்பவர் போட்டியிட்டதால் கார்த்தி என்பவர் வாக்கு சேகரிக்க செல்லவில்லை என்பதும் தெரியவந்துள்ளது இப்போது போலி செய்தியை வெளியிட்ட செந்தில் போன்றோர் பொதுமக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போயுள்ளனர் . எப்படி பாஜகவை எதிர்த்து பல்வேறு பதிலடியை செந்தில் சந்தித்து வருகிறாரோ அதே போன்று வட இந்தியாவில் ஒருவர் இருக்கிறார் . அவர் பெயர் லல்லன் டாப் 

சமீபத்தில் சாமானியர் ஒருவரிடம் கேள்விகேட்க சென்று வாங்கி கட்டிக்கொண்டுள்ளார் "லல்லன்  டாப்" கிராமங்களில் சென்று சாமானியர் ஒருவரிடம் பிரதமர் குறித்து கேள்வி எழுப்பினார்  "லல்லன் டாப்" பாமரனோ, மோடியை சுவாமி நாராயணன் என்றும் நெஞ்சை கிழித்து காட்டுவேன் என்று திணறடித்தார்,பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமியை நாரதர் என்றும், யோகியை அனுமான் என்றும்,

அமித்ஷாவை நாராயணனின் சேஷநாகம் மற்றும் லக்ஷ்மண் என்றும், எப்போதெல்லாம் அநியாயம் நடக்குமோ தெய்வங்கள் வருவார்கள் என்பதற்க்கு உதாரணமே இவர்கள் என்று சொல்ல..."உங்களுக்கு இதை எல்லாம் யார் சொல்லி கொடுக்கிறார்கள், மொபைலில் வருகிறதா" என லல்லன் டாப்  கேட்க,. இல்லை இவர்கள் எல்லாம் என் கனவில் வந்து போகிறவர்கள் என ஆனி அடித்தாற்போல் பேச, லல்லன் டாப் முகம் வாடிவிட்டது ,

இவர்கள்தான் மோடியின் ஆட்சியின் தூண்கள் எதனை போலி செய்தி கதைகளை பரப்பினாலும் இந்திய மக்களுக்கும் சாமானியர்களுக்கும் மோடியின் ஆட்சியின் அருமை தெரியும் எனவும் பலர் வடநாட்டு செந்தில் அதாவது லல்லன் டாப் சாமானியர் கிழித்து எடுத்த விடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.