Cinema

விசில் போடு பாட்டிற்குள் இருக்கும் பல பாடல்கள் குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்...!

VIJAY
VIJAY

டிப்பில் ஆர்வமில்லாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி சினிமாவில் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு நடிகராக தனது திரை பயணத்தை விரைவில் முடிக்க போகும் ஒரு நடிகர் தான் இளையதளபதி விஜய்! ஒரு நடிகராக எப்படி தனது நிலையை கடந்து வந்து தற்போது முக்கிய அடிகள் பட்டியலில் இருக்கிறாரோ அதேபோன்று பாடகர் ஆகவும் பல ரசிகர்களை தன் வசம் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படமான தேவா திரைப்படத்தில் நடித்தது மட்டுமின்றி அய்யய்யோ அலமேலு என்ற பாடலை பாடி நல்ல வரவேற்பை கண்டால் அதற்குப் பிறகு நிலவே நிலவே,  என்னோட லைலா வராலிஸ்டைலா என்ற பாடல்களை பாடினார். 


அதோடு 2002 ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் உள்ளத்தில் உள்ளதே என்ற பாடலை பாடி தனது ரசிகர்கள் அனைவருக்கும் பாடல் மூலமும் விருந்தளித்தார். இதனை அடுத்து சச்சின் திரைப்படத்தில் வாடி வாடி சிடி என்ற பாட்டை அதிரடியாக பாடி பட்டி தொட்டி எங்கும் முணுமுணுக்கும் பாடலாக விஜயின் குரல் ஒலித்தது. இதனைத் தொடர்ந்து துப்பாக்கியில் google google,  வாங்கன வணக்கங்கண்ணா,  கண்டாங்கி கண்டாங்கி, செல்வி புள்ள,செல்லக்குட்டி, வெறித்தனம் என தொடர்ச்சியாக தான் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் ஒரு பாடலையாவது பாடி அவரது ரசிகர்களைக் கொண்டாட வைத்தார். அந்த வகையில் கடந்த இரண்டு மூன்று படங்களில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி, ரஞ்சிதமே ஆகிய பாடல்கள் சிறு குழந்தைகளையும் கவர்ந்திழித்தது. இப்படி பாடல் மூலமும் தனது ரசிகர்களை பெருக்கி வந்த விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இதனால் சினிமாவில் தனது இரண்டு திரைப்படங்களை மட்டும் முடித்துவிட்டு மொத்தமாக அரசியலில் நுழையுள்ளதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். மேலும் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் விஜய் நடித்த வருகிறார் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் 80 சதவீதம் முடிந்துவிட்டது. இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோட் திரைப்படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியானது இந்த பாடல் விஜயின் குரலில் வெளியானதால் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த தகவலால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்களை இந்த பாடல் ஆறுதல் படுத்தியதோடு வெளியான 24 மணி நேரத்தில் பல பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து, அதே சமயத்தில் இப்பாடலால் சில சர்ச்சைகளும் கலவையான விமர்சனங்களும் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த பாடல் குறித்து நெடிசன் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைதளம் முழுவதும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா என விஜய் தனது பாடலை தொடங்கும் பொழுதே அந்த பாடல் சூர்யாவின் நடிப்பில் வெளியான வேல் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் உன்ன போல என்ற பாடலைப் போன்ற மெத்தை கொண்டுள்ளதாகவும் அதற்குப் பிறகு படிப்படியாக விஜய்யின் பாடல் அடுத்தடுத்த வரிகளுக்குச் செல்லும் பொழுது வலிமை படத்த இடம்பெற்றுள்ள வேற மாதிரி என்ற பாடலைப் போன்றும், பசும்பொன் படத்தில் இடம்பெற்றிருக்கும் தாமரைப்பூ என்ற பாடலைப் போன்றும், ஜவான் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த வந்த இடம் என்ற பாடலைப் போன்றும், அஸ்வின் நடிப்பில் வெளியான பாடலான அடிப்போடி பாடலை போன்று இசையமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் விசில் போடு பாட்டுக்குள் இத்தனை பாட்டு ஒளிந்திருக்கிறதா நம்மளை இத்தனை பாட்டையும் ஒரே நேரத்தில் இந்த விசில் போடு பாடல் நினைவுபடுத்துகிறதே என பல விமர்சனங்கள் இதற்கு முன் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் விசில் போடு பாடல் பல  விஜய் ரசிகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது!